வாய்ச்சவடால் கட்சிகளுக்கு பாஜக எதிர்ப்பை விட தங்களது சட்டவாத கையாளாகாத தனத்தின் மீது தற்பெருமை தாங்கவில்லை

துரை. சண்முகம்

வாய்ச்சவடால் கட்சிகளுக்கு பாஜக எதிர்ப்பை விட   தங்களது சட்டவாத கையாளாகாத தனத்தின் மீது தற்பெருமை தாங்கவில்லை

இத்தனை நாள் அழுத்தங்கள்! போராட்டம்! அடி உதை! உயிரிழப்பு! காயங்கள் இத்தனையையும் தாண்டி கரப்பான் பூச்சி போராடுகிறது!

இந்த நோக்கில் அரசியலை வளர்த்தெடுக்க இயலாத அவலம் இங்கே நீடிக்கிறது.

நீட்  வினாத்தாள் கசிவு நீட் மரணங்கள் என்பவை எரியும் சருகின் ஒரு பகுதிதான். எங்களை அசைக்கவோ! ஆட்டவோ முடியாது! என இறுமாந்து இருந்த பாஜகவை

அலற வைத்திருக்கிறது நாடு முழுக்க இந்தப் போராட்டத்தின் வீச்சு. 

இது எதிரிகளுக்கு புரிகிறது. 

இங்குள்ள வாய்ச்சவடால் கட்சிகளுக்கு பாஜக எதிர்ப்பை விட 

தங்களது சட்டவாத கையாளாகாத தனத்தின் மீது தற்பெருமை தாங்கவில்லை. 

நீட்டை ஒழுங்குபடுத்துவது என்று வடக்கு சொல்கிறது. தமிழ்நாடு நீட்டே வேண்டாம் என்று வழிகாட்டுகிறது! என்று பெருமை பேசுகிறார்கள். என்ன வழியை காட்டி இருக்கிறது என்பது சொல்பவர்களுக்கே வெளிச்சம்.

ஆட்சியில் இருந்த ஐந்து ஆண்டுகளும் சட்டவாத நடைமுறைகள் அடையாள ஆர்ப்பாட்டங்களை தாண்டி இப்படி ஒரு போராட்டத்திற்கு தமிழகத்தை வழிநடத்த எந்த அடிப்படையும் இல்லாமல் வெத்துப் பேச்சு! 

எதிர்க்கட்சியாக இருக்கும் இப்போதும் கூட பாலன் இல்லத்தில் போய் சவடால். 

ஏன் அறிவாலயமும் பெரியார் திடலும் நந்தனை வழிமறித்த நந்தியாய் மூடி கிடக்கிறது. தமிழக இளைஞர்களே வாருங்கள் நீட் எதிர்ப்பு போராட்டத்தை செய்வோம் என்று அழைக்க வேண்டியதுதானே! இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாசிச பாஜகவை எதிர்க்க வீறு கொண்டு வேலை செய்ய எது தடுக்கிறது?

ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக இளைஞர்களை நீட்டுக்கு எதிராக திரட்டி இப்படி ஒரு போராட்டத்தை எந்த வகையிலும் நடத்தாமல் இந்த லட்சணத்தில் வழிகாட்டுகிறார்களாம். 

தி.க. மதிவதனி அவர்கள் ஒரு படி மேலே போய்  தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் என்ன? அடுத்து இதை விட பெரிய சங்கி வரப்போகிறார்! 

என்று கோரிக்கையை நக்கல் அடித்து வேறு உரை.

இது தேர்தல் அரசியலுக்கும் பொருந்தும் தானே! தவெக போய்விட்டால் சோசலிச ஆட்சியா அல்லது ஜனநாயக ஆட்சியா வரப்போகிறது?  எனவே அதுவே நீடிக்கட்டும் என்பதை ஏற்பீர்களா? 

இல்லை, முதலாளித்துவ ஆட்சிகள் ஒழியும் வரை இடைக்கட்ட தீர்வுகளையே ஒத்துக் கொள்ள மாட்டோம் என்று முடிவு எடுப்பீர்களா? இந்த தேர்தல் அரசியலே பிராடு என பெரியாரைப் போல இதில் பேச 

வாய் வரவில்லையே!

இதுவெல்லாம் ஒரு புரட்சியா? 

நீங்கள் ஒரே அடியாக நீட்டை தூக்கி எறிய இந்திய அளவில் இறங்குவதற்கு என்ன திட்டம் உள்ளது? தடியடி கண்ணீர் புகை குண்டுகள் எதற்கும் கலையாமல் காயம் பட்டு மாதக்கணக்கில் இப்படி ஒரு போராட்டத்தை யோசிக்கவாவது உங்களால் முடியுமா? 

இரண்டு சீட்டு மூணு சீட்டு என்று இணையத்தில் திராவிட அன்பர்களால் கேலி செய்யப்பட்ட தோழர்கள்தான் தமிழ்நாடு முழுக்க போலீஸிடம் அடி வாங்கி போராடி களத்தில் இருக்கிறார்கள். பெரிய கட்சி படைகள் எங்கே?

இவர்களின் குறி தவெக வாக

இருக்கிறது. பாஜக வாக அல்ல.

ஆட்சி இல்லாத தருணத்திலும் பாஜகவுக்கு சவால் விட்டு இறங்கி வேலை செய்ய எண்ணமில்லை.

இன்னொரு பக்கம்,

இந்த நேரத்தில் கொள்கை எதிரியை எதிர்க்க வேண்டிய தவெக , ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க ஒன்றிய அரசுக்கு பணிந்து கிடக்கிறது. நடுங்கி நிற்கிறது.

அரசு என்பதின் அடக்குமுறை முகத்தை காட்டுகிறது. 

இதன் கூடவே தேர்தல்தான் மக்களது எல்லா நலன்களையும் தீர்மானிக்கிறது எனும் ஒப்பனைகள் கலைகிறது!

கம்யூனிஸ்டுகள் இந்த காட்சிகளில் இருந்து உணர்த்த வேண்டிய உண்மையும் இதுதான்!

- துரை. சண்முகம்

https://www.facebook.com/100080904177819/posts/1070280062345456/?rdid=m3lFUK66m6p8vL3s

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு