உயிரைக்கொல்லும் ஆபத்தாக மாறும் பெருங்கடல்கள்

Counter Currents

உயிரைக்கொல்லும் ஆபத்தாக மாறும் பெருங்கடல்கள்

“உலகப் பெருங்கடல்களில் சுமார் 82% தற்போது கடல் வெப்ப அலைகளை (marine heat waves) எதிர்கொண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.” (கடல் வெப்ப அலைகளின் எழுச்சி கடல் வாழ் உயிரினங்களை நிலைகுலையச் செய்ய அச்சுறுத்துகிறது, யேல் சுற்றுச்சூழல்360 [YaleEnvironment360], செப்டம்பர் 3, 2026)

கோப்பர்நிகஸ் (Copernicus) அமைப்பின்படி, ஆகஸ்ட் 10, 2026 நிலவரப்படி: “எல் நினோ (El Niño) நிலைமைகள் நிலவக்கூடிய மற்றும் வரும் மாதங்களில் மேலும் வலுவடையும் என்று கணிக்கப்பட்டுள்ள வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலின் பெரும்பகுதியில், ஜூலை மாதத்தில் வழக்கத்திற்கு மாறான மிக அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.”

இதன் விளைவாக, தாங்க முடியாத தீவிர வெப்பம், கடுமையான இடியுடன் கூடிய புயல்கள், பெரும் சேதத்தைப்படுத்தும் திடீர் வெள்ளப்பெருக்கு, இதுவரை அனுபவித்திராத மிகக் கடுமையான வறட்சி போன்ற இயற்கை நிகழ்வுகள் இந்த முன்னறிவிப்பைத் தொடர்ந்து ஏற்பட வாய்ப்புள்ளது. நாம் வரவிருக்கும் ஆபத்தை எதிர்கொள்ளத் தயாராக வேண்டிய நேரம் இதுவா?

நாம் என்ன செய்ய வேண்டும்? (What To Do?)

UNFCCC COP31 காலநிலை உச்சிமாநாடு 2026 நவம்பர் 9 அன்று துருக்கியின் அந்தாலியாவில் உள்ள அந்தாலியா எக்ஸ்போ மையத்தில் (Antalya Expo Center, Antalya, Türkiye) நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இது அடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்ற மாநாடாகும். புதைபடிவ எரிபொருட்களிலிருந்து (fossil fuels) தூய்மையான ஆற்றலுக்கு (clean energy) மாறுவதை உலகளவில் விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட காலநிலை கொள்கைகளின் "முறையான செயலாக்கம் மற்றும் அமலாக்கத்தில்" COP31 கவனம் செலுத்தும் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாகும். இது நடந்தால், உலக நாடுகளின் கடந்த முப்பது COP கூட்டங்களிலிருந்தும் இது ஒரு புரட்சிகரமான மாற்றமாக இருக்கும்.

அச்சமூட்டும் கடல் நிலவரங்கள் (Alarming Ocean Conditions)

கடல் வெப்பம் வழக்கத்திற்கு மாறாகக் கடுமையாக உள்ளது. உலகளாவிய காலநிலை அபாயங்கள் (Global Climate Risks) அமைப்பின்படி: கடல் நீரில் ஏற்படும் கடுமையான வெப்ப அலைகள் கடல் வாழ் உயிரினங்களின் மீது ஆழமான மற்றும் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

உண்மையில், “தற்போதைய கடல் வெப்ப அலைகள் ஏற்கனவே கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. கலிபோர்னியா பழுப்பு கூழைக்கடாக்கள் (brown pelicans), மூழ்கிப் பறவைகள் (loons), மற்றும் முக்குளிப்பான்கள் (grebes) உள்ளிட்ட இறந்த மற்றும் இறந்து கொண்டிருக்கும் பறவைகள் தெற்கு கலிபோர்னியா கடற்கரைகளில் மீண்டும் ஒதுங்குகின்றன. 'நீர்க்காகங்கள் (cormorants) கரைக்கு நடந்து வந்து, ஒரு மணி நேரத்திற்குள் இறந்து போவதை நாங்கள் காண்கிறோம்' என்று ஸ்கிரிப்ஸ் கடலியல் நிறுவனத்தின் (Scripps Institution of Oceanography) ஆராய்ச்சியாளர் டாமி ரஸ்ஸல் (Tammy Russell) அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் (Associated Press) தெரிவித்துள்ளார், 'மேலும் இது ஒட்டுமொத்த கடற்கரை முழுவதிலும் நடப்பதை நாங்கள் காண்கிறோம்.' தென்னமெரிக்காவின் பசிபிக் கடற்கரையோரத்தில் உள்ள கடற்பறவைகள் சமீபத்திய மாதங்களில் பெருமளவில் இறந்து வருகின்றன, மேலும் நிபுணர்கள் இந்த மரணங்களை உயர்ந்த கடல் வெப்பநிலையுடன் தொடர்புபடுத்தியுள்ளனர்.” (யேல் சுற்றுச்சூழல்360)

படிக்கவும்: உலகை அச்சுறுத்தும் எல்-நினோ: ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு பலியிடப்படும் பூகோளம்

"சமீபத்தில் கலிபோர்னியாவில் நிகழ்ந்தது, ஈக்வடார் கடற்கரையில் நாம் காண்பதைப் போன்றதே ஆகும்," என்று அமெரிக்க பறவைகள் பாதுகாப்பு அமைப்பின் (American Bird Conservancy - ABC) தென்னமெரிக்காவிற்கான கடல்சார் திட்ட ஒருங்கிணைப்பாளர் செபாஸ்டியன் குரூஸ் (Sebástian Cruz) தெரிவித்தார். "எங்களது சமீபத்திய ஆய்வுகள் ஒவ்வொரு நாளும் கடற்பறவைகள் கரைகளில் ஒதுங்குவதையும் இறப்பதையும் பதிவு செய்கின்றன, ஆனால் ஜூன் மாதத்தில் இது வெடித்தது, இதற்கு முன் அத்தகைய பதிவுகள் இல்லாத கடற்கரைகளிலும் பறவைகள் தோன்றின. இது பசிபிக் பெருங்கடலின் இவ்வளவு பெரிய பரப்பில் எல் நினோவின் பிரம்மாண்ட தாக்கத்தை எடுத்துக் காட்டுகிறது." (அமெரிக்க பறவைகள் பாதுகாப்பு அமைப்பு, ஆகஸ்ட் 6, 2026)

உலக வானிலை அமைப்பின் (WMO) எச்சரிக்கை – இந்த விதிவிலக்கான எல் நினோவிற்கு விதிவிலக்கான தயாரிப்பும் எதிர்வினையும் தேவைப்படுகிறது. உலக வானிலை அமைப்பு அதன் 50 ஆண்டுகால வரலாற்றில், உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் காப்பாற்றுவதற்கான முன்னறிவிப்புகளையும் சேவைகளையும் வழங்குவதில் முன்னணியில் இருக்கும் தேசிய வானிலை மற்றும் நீரியல் சேவைகளுடன் (National Meteorological and Hydrological Services) இணைந்து இதுபோன்ற ஒரு பெரிய திரட்டலை (mobilization) ஒருபோதும் மேற்கொண்டதில்லை.

வெப்பநிலை நவீன காலத்தில் இதுவரை கண்டிராத அளவை எட்டியுள்ளதால், உலகப் பெருங்கடல்களுக்கு வரவிருக்கும் ஆபத்தான காலங்கள் குறித்தும், 2027 வரை நீடிக்கக்கூடிய தீவிர வானிலை நிகழ்வுகளின் அபாயங்கள் குறித்தும் பல ஆதாரங்கள் எச்சரிக்கின்றன. உலக வானிலை அமைப்பின் புதிய இற்றைப்படுத்தல் (update), எல் நினோ உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்றும், அது 2027 ஆம் ஆண்டு வரை நீடிப்பதற்கான 100% சாத்தியக்கூறுகளுடன் மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறுகிறது. உலகின் பல பகுதிகள் அசாதாரண அளவிலான வெள்ளம், வறட்சி மற்றும்/அல்லது தீவிர வெப்பத்தை அனுபவிக்கும்.

ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் (António Guterres) கருத்துப்படி, “எல் நினோ நமது கண் முன்னாலேயே பிரம்மாண்ட வடிவம் பெற்று வருகிறது. அறிவியல் எந்த சந்தேகத்திற்கும் இடமளிவில்லை: நமது கிரகம் இதுவரை அறியப்படாத புதிய ஆபத்தான சூழலில் (uncharted waters) உள்ளது, மேலும் அந்த நீர்நிலைகள் வெப்பமடைந்து வருகின்றன. கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்ந்து வருகிறது, வெப்பநிலையும் தொடர்ந்து ஏறிக்கொண்டே இருக்கிறது, உலகம் தீவிர வானிலையின் ஆபத்தான மண்டலத்தில் உள்ளது. தற்போதைய போட்டி என்பது அதிகரித்து வரும் அபாயங்களுக்கும், காலநிலை நடவடிக்கை எடுத்து மக்களைப் பாதுகாப்பதற்கான நமது அர்ப்பணிப்பிற்கும் இடையேதான். அந்தப் போட்டியில் நாம் கண்டிப்பாக வெல்ல வேண்டும்.”

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் உலகத் தலைமைகளுக்கான சவால் இதுவரை இல்லாத அளவிற்கு மிக முக்கியமானதாக மாறியுள்ளது.

உலக வானிலை அமைப்பின் (WMO) அறிவிப்பு: “இந்த விதிவிலக்கான எல் நினோவிற்கு விதிவிலக்கான தயாரிப்பும் எதிர்வினையும் தேவைப்படுகிறது. உலக வானிலை அமைப்பின் 50 ஆண்டுகால வரலாற்றில், உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் காப்பாற்றுவதற்கான முன்னறிவிப்புகளையும் சேவைகளையும் வழங்குவதில் முன்னணியில் இருக்கும் தேசிய வானிலை மற்றும் நீரியல் சேவைகளுடன் இணைந்து இத்தகைய ஒரு பெரிய திரட்டலை நாங்கள் இதற்கு முன் எப்போதும் மேற்கொண்டதில்லை... பேரிடர் மேலாண்மை மற்றும் விவசாயம், சுகாதாரம், எரிசக்தி மற்றும் நீர் வளங்கள் போன்ற காலநிலை-உணர்திறன் கொண்ட துறைகளை ஆதரிக்கத் தேவையான காலநிலை தகவல்களையும் நுண்ணறிவுகளையும் வழங்க, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனிதாபிமான அமைப்பில் உள்ள கூட்டாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற உலக வானிலை அமைப்பு அர்ப்பணிப்புடன் உள்ளது. நாம் வீணடிக்க ஒரு நொடி கூட இல்லை.”

காலநிலை கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக ஐநா ஒப்புதல் (UN Admits Climate Out of Control)

ஐக்கிய நாடுகள் சபை, ஒரு மூலோபாய பின்வாங்கலாக, பூமி விரைவில் 2015 பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் ஒப்புக்கொள்ளப்பட்ட பாதுகாப்பான வெப்பநிலை வரம்புகளைத் தாண்டப்போகிறது என்பதை இறுதியாக ஒப்புக்கொண்டுள்ளது. (புவி வெப்பமயமாதல் வரம்பைத் தாண்டும், ஏபி நியூஸ் [AP News], செப்டம்பர் 1, 2026): "நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயுவை எரிப்பதால் ஏற்படும் வெப்பமயமாதல் காரணமாக, 2015 பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் உலகம் ஒப்புக்கொண்ட பாதுகாப்பான வெப்பநிலை வரம்பை பூமி விரைவில் தாண்டப்போகிறது என்று ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தால் (United Nations Environment Programme) புதன்கிழமை வெளியிடப்பட்ட முதன்முறையான ஒரு கடுமையான அறிக்கை கூறுகிறது."

தடுப்பதும் கட்டுப்படுத்துவதும் - உச்ச வெப்பநிலையைக் கட்டுப்படுத்துதல் (Coping and Containment – Limit Peak Warming)

புதிய ஐநா அறிக்கை பின்வருமாறு கூறுகிறது: “இந்த எல்லை மீறிய காலகட்டத்தில் (overshoot period), மோசமடைந்து வரும் காலநிலை மாற்றம் மற்றும் அதன் தீவிர வானிலை காரணமாக அதிகமான மக்கள் இறப்பார்கள் அல்லது நோய்வாய்ப்படுவார்கள் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது. உணவு உற்பத்தி குறையும், மக்கள் பசியால் வாடுவார்கள், தண்ணீர் பற்றாக்குறை மோசமடையும், பொருளாதாரங்கள் பாதிக்கப்படும், பவளப்பாறைகள் போன்ற உயிரினங்கள் அழியும்.”

“இமயமலைப் பனிப்பாறை சரிந்ததன் ஒரு பகுதியாக சமீபத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட உயிர்க்கொல்லி வெள்ளப்பெருக்கின் பின்னணியில் உள்ள காரணங்கள் சிக்கலானவை என்றாலும், துரதிர்ஷ்டவசமாக இது போன்ற நிகழ்வுகளை நாம் அதிகம் காண நேரிடும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், இதனால்தான் நாம் உச்ச வெப்பநிலையைக் கட்டுப்படுத்த வேண்டும்.”

மேற்கு அண்டார்டிக் மற்றும் கிரீன்லாந்து பனிப்பாறைகளின் இழப்பு, அமேசான் மழைக்காடுகளின் அழிவு மற்றும் ஐரோப்பாவின் பெரும்பகுதியை வெப்பமாக வைத்திருக்கும் அட்லாண்டிக் பெருங்கடல் சுழற்சி அமைப்பு முடங்குவது உள்ளிட்ட மீளமுடியாத மற்றும் அடுக்கடுக்கான விளைவுகளைக் கொண்ட ஆபத்தான புள்ளிகள் (tipping points) குறித்து இந்த அறிக்கை எச்சரிக்கிறது.

காலநிலை வெப்பமயமாதலை முடிந்தவரை மிதப்படுத்தவும், மெதுவாக்கவும் உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஐநா அறிக்கை அழைப்பு விடுத்துள்ளது. காலநிலை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதில் கடந்தகால COP கூட்டங்களின் முழுமையான தோல்வியை இது ஒப்புக்கொள்வதாகும். இப்போது, நாடுகள் அதை "கட்டுப்படுத்த" (contain) முயற்சிக்க வேண்டும்!

இதற்கிடையில், உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டைக் குறைக்கும் அதே வேளையில், புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை விரிவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. நீங்களே யோசித்துப் பாருங்கள்! (Go figure!)

https://countercurrents.org/2026/09/oceans-turn-deadly-dangerous/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு