கவிதை: டிமிட்ரோவ் மூட்டிய தீ…

சேல் முருகன்

கவிதை: டிமிட்ரோவ் மூட்டிய தீ…

திரும்பிப் பார்த்தது
உலகமே திரும்பிப் பார்த்தது
பெரிலின் நீதிமன்ற நெருப்பு மேடையில்
ஒரு சிங்கம் கர்ஜித்து நின்ற போது
உலகமே திரும்பிப் பார்த்தது
அவர் தான் டிமிட்ரோவ்

 

கம்யூனிஸ்டுகளை எரிக்க
ஹிட்லர் சதி செய்து
ரைஸ்டாக்கில் மூட்டிய தீ
பாசிசத்தை எரிக்கும் தீயாய்
டிமிட்ரோவ் மூட்டினான்
பெர்லின் கூண்டுக்குள்ளிருந்து
அது கொழுந்துவிட்டு எரிந்தது
பாட்டாளிகளின் நெஞ்சிலே

 

சமரசவாதிகள்
நான் தான் கம்யூனிஸ்ட்  என்று
ஹிட்லரை காப்பாற்ற
போர் இரைச்சலில்
கூச்சல் எழுப்பிய போது
இருள் விலகியது
மௌனம் கலைந்தது

டிமிட்ரோவ் என்பதே
பாசிச எதிர்ப்பின் மறு பெயர்
அவர் மூட்டிய தீ
அன்று பாட்டாளிகளின்
மனதில் தீயாய் எரிந்தது

 

ஏகாதிபத்தியத்தை வீழ்த்த
பாசிசத்தை வீழ்த்த
மார்க்சிய லெனினியமாய்
விடுதலையின் தாகத் தீயாய்
டிமிட்ரோவ் மூட்டிய தீ
பாட்டாளிகளின் மனதில்
இன்றும் தீயாய் எரிகிறது

 

வாழ்க அவர் நினைவு
வீழ்க பாசிசம்

- சேல் முருகன்