கவிதை: பொன்னுயிர் பறிக்கும் போர் வெறி பேய்கள்

ஞாலன்

கவிதை: பொன்னுயிர் பறிக்கும் போர் வெறி பேய்கள்

பொன்னுயிர் பறிக்கும்
போர் வெறி பேய்கள்
நாட்திசையெங்கும்
நரவெறியாட்டம்!

 

நிதி மூலதன நாய்கள்
சதி வாய்பிளந்தே
வெறியுடன் குதறும்
கதியே எங்கும்!

 

தரைமட்டமான
கட்டிட சிதறல்
காணும் எங்கும்
பிணங்களின் குவியல்!

 

உறவுகள் சிதறி
உறுப்புகள் அறுந்து
அவலக்குரலில்
அலறுது காசா..!

 

மலரினும் இனிய
மழலையின் முகங்கள்
பட்டினி கொடுமையில்
பதறுது பாரீர்!

 

பிஞ்சுகளின் சாவை
கண்பார்க்கும் கொடுமை
அஞ்சி அஞ்சியே
அலறுது மனமே!

 

இசுரேல் கொடும்பேயும்
அமெரிக்க வெறிநாயும்
காசாவின் இரத்தத்தில்
களிப்புறு குளியல்..!

 

வகை வகை ஆயுதம்
தினந்தினம் செய்தே
நெஞ்சம் நடுங்குற
புவியினை பிளக்கும்

 

 

நிதி மூலதன  அரக்கர்கள்
கொடு்ம் பிணம் விழவே
கொலை வாள் எடுத்திட
நல்முரசறைவோம் உலகத்தீரே!

 

-        ஞாலன்