காக்ரோச் ஜனதா பார்ட்டியும் தவெகவும்

இரா. முருகவேள் - கீழடி பதிப்பகம் துரை.சண்முகம் - ஸ்டாலின் ராஜாங்கம்

காக்ரோச் ஜனதா பார்ட்டியும் தவெகவும்

1
காக்ரோச் ஜனதா பார்ட்டிக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் இடையில் ஏராளமான வேற்றுமைகள் உள்ளன 

Gen z இளைஞர்களின் 

கோபம், விரக்தி ஆகியவற்றின் வெளிப்பாடாக கரப்பான் பூச்சி கட்சி இருக்கிறது. அது இன்னமும் அரசியல் கட்சி வடிவம் எடுக்கவில்லை என்றாலும் இதுவரை புனிதமாக கருதப்பட்டு வந்த அரசு நிறுவனங்கள் மீது உக்கிரமான தாக்குதல் தொடுக்கிறது. 

உச்ச நீதிமன்றம் கடவுளுக்கு சமானமாக இந்திய ஆளும் வர்க்கத்தால் முன்வைக்கப் படுகிறது. விமர்சனங்கள் இருந்தாலும் தேர்தல் கமிஷன் மிகவும் முக்கியமான அதிகாரம் மிக்க அமைப்பாக இருக்கிறது. இவற்றின் மீது  Gen z இளைஞர்கள் கடும் தாக்குதல் தொடுக்கின்றனர். கல் கோத்தியா பல்கலைக் கழகம் சீன இயந்திர நாயை தங்களுடையது என்று ஏமாற்றிய போது அரசின் மீது மிகப் பெரிய விமர்சனம் வெடித்தது. இப்போது மக்களின் கோபம் CJP யினால் அடுத்த இடத்துக்கு போகிறது.

அதில் அரசியல் கட்சிகள், போட்டி கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊடுருவலாம். அல்லது CJP கலைந்தும் போகலாம்.  ஆனால் இப்போது அது பிஜேபி அரசுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் எதிரான மக்கள் கோபத்தின் வடிவம்.

ஆனால் த வெ க மாநில கார்ப்பரேட் அமைப்புகளால் ஐந்து ஆண்டுகளாக திட்டமிட்டு உருவாக்கப் பட்ட அமைப்பு. அதிகாரத்தை கைப்பற்றுவது மட்டுமே அதன் நோக்கம். அதிகாரத்தை கேள்விக்கு உள்ளாக்குபது, தகர்ப்பது ஆகியவை அதன் ஜீனிலேயே இல்லை. 

த வெ க வை பிஜேபியின் குழந்தை என்பது அபத்தம். அது இளைஞர்களின் எழுச்சி என்பது இன்னும் அபத்தம். மாநிலத்தின் குறிப்பிட்ட ஆளும் வர்க்கத்தின் நலனுக்காக எடுக்கப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கை த வெ க. புதிதாக தோன்றியுள்ள ஒரு மாநில கட்சி.

பிஜேபி ஆட்சியில் மக்களின் கோபம் பல்வேறு வடிவங்களில் வெடித்து வெளிவருகிறது. CJP அதில் ஒன்று. பிஜேபி க்கு எதிராக எதிர்க் கட்சிகளும், ஊடகங்களும் திட்டவட்டமான எதிர்வினை ஆற்றத் தவறும் போது மக்கள் கோபம் இப்படித்தான் வெளிப்படும்.

இரா. முருகவேள்

https://www.facebook.com/1714910257/posts/10216431658100072/?rdid=9Ktn7XipazLusgdq

========================================================

2
த வெ க நல்ல ஆட்சி செய்யுமா இல்லையா
த வெ க நல்ல ஆட்சி செய்யுமா இல்லையா என்று தெரியாது. ஆனால் அது ஒரு வரலாற்று பாத்திரத்தை நிகழ்த்தி உள்ளது. பிஜேபி யின் வாக்கு சதவீதம் ஏழு அல்லது எட்டு ஆக இருந்தது 3 ஆகக் குறைந்து விட்டது.
சாதிய தமிழ் தேசியம், முப்பாட்டன் முருகன் என்றெல்லாம் பிஜேபி அரசியலை வேறு மொழியில் பேசிய நாம் தமிழர் வாக்குகளும் பாதியாக அதாவது 4 சதவீதமாக குறைந்து விட்டன.  பல சாதிய கட்சிகள் காணாமல் போய் விட்டன.
இதையெல்லாம் திமுக செய்திருக்க வாய்ப்பே இல்லை. ஒரு கவர்ச்சி கரமான தலைவன், புதுக் கட்சி தந்த உற்சாகம் தான் பிற்போக்கு சக்திகளை பதினைந்து ஆண்டுகள் பின்னால் தள்ளி விட்டது.
பிஜேபி உடன் கூட்டணி வைத்த அதிமுக படுமோசமான நிலையில் உள்ளது. பிஜேபியின் பொருளாதார கொள்கைகளை அமுல் படுத்திய திமுக தனது முதுகெலும்பான அரசு ஊழியர் ஆசிரியரின் கடும் வெறுப்பை  பெற்றுக் கொண்டது.
 மக்கள் திமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கொடுத்து இருக்கிறார்கள். திரும்பவும் அடுத்த தேர்தலில் மீண்டும் வரவும் வாய்ப்பு இருக்கிறது. தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம் தான். 
ஆனால்  சனாதன எதிர்ப்பு என்பது பார்ப்பன எதிர்ப்பு மட்டுமல்ல. எல்லா சாதி ஆதிக்கத்தையும் எதிர்ப்பது. மீண்டும் இந்த சாதிக்  கட்சிகளுடன் திமுக கூட்டணி வைத்தால், குறிப்பிட்ட ஆதிக்க சாதிகளை மட்டுமே சுற்றிச் சுற்றி வந்தால்,  த வெ கவின் எழுச்சியால் தற்செயலாக நடந்த இந்த நல்ல விஷயம் மீண்டும் பின்னுக்கு தள்ளப் பட்டு விடும்.

இரா. முருகவேள்

https://www.facebook.com/story.php?story_fbid=pfbid02Geeqt5skdDgrnCNpmjYPHDM6ShrkDtTDV3m7PbcyNaxLWiE7de2UQFks2QbMZpUPl&id=1714910257&sfnsn=wiwspwa&mibextid=6aamW6&_rdr

========================================================

3
சமூக அவலங்களுக்கு யார் பொறுப்பு?

சமூக அக்கறை மற்றும் எதிர்க்கட்சி என்ற அளவில் தாங்கள் சொல்லும் கருத்து கவனத்தில் கொள்ள வேண்டியது. 

ஆனால் இதை சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் ஒருவரை ஒருவர் தாக்குவதற்கு மக்கள் பக்கம் நின்று கொண்டு பேசுவதற்குள் வெளிப்படுத்த வேண்டிய முக்கியமான அரசியல் ஒன்று உள்ளது. 

சட்டம் ஒழுங்காக கையாளப்பட வேண்டியது என்பது ஒரு பகுதி மட்டும்தான். 

இது சமூக சீர்கேடாக நிலை பெற்று புதிய புதிய அவலங்களை தோற்றுவித்துக் கொண்டே இருப்பது எதனால்? இதற்கு யார் பொறுப்பு? 

தமிழகத்தில் நீண்ட காலம் அரசியல் செய்யவும், பலகாலம் ஆட்சி செய்ய வாய்ப்பும் பெற்று இருந்த திராவிட கட்சி இந்த சமூகத்தை வளர்த்தெடுப்பதில் குறிப்பிட்ட மாற்றங்களை ஏன் உங்களால் உருவாக்க முடியவில்லை?

நீண்ட காலம் ஒரு சமூகத்தையே குடி கூத்து கும்மாளம் கஞ்சா போதை என சீரழித்துவிட்டு 

நேத்து வந்தவன் அனைத்தையும் ஒரே நாளில் திருத்தி விட வேண்டும் என்பது தேர்தல் அரசியலுக்கு மட்டும்தான் பயன்படும்.

இந்த சமுதாயம் உங்கள் கையில் ஒப்படைக்கப்பட்டு இவ்வளவு கெடுத்து வைத்திருக்கிறீர்களே! 

இதைப் பற்றிய குற்ற உணர்வு உங்களுக்கு உண்டா? 

புதிதாக வந்திருக்கும் அரசு 

சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் கருதிக் கொண்டு அணுகினால் அதுவும் தோல்வியையே தழுவும்.

குறிப்பாக பாலியல் வன்முறை சமூக சீர்கேடுகளை தோற்றுவிக்கும் அடிப்படைகளுக்கு எதிராக மாற்றங்களை உருவாக்காத போது திமுக மாதிரி 

தவெக வையும் மக்கள் தள்ளி வைப்பார்கள். 

எப்போதும் ஒரு கொள்கை சித்தாந்த அடிப்படையில் 

சமுதாயத்தை மாற்றுவதற்கு போராடும் கம்யூனிஸ்டுகளின் பணிதான் இந்த நிலையிலும் மக்களின் போராட்ட அரங்கில் 

அச்சப்படாமல் நிற்கிறது.

மக்களை அச்சப்படுத்துபவர்கள் அச்சப்பட வேண்டிய காலம் வரும்! 

அப்போது நீங்கள் 

"அய்யோ! கரப்பான் பூச்சிகள்!" என்று அலறுவீர்கள்! 

சித்தாந்த ரீதியாக உங்கள் முன் பெருகும் போது,

" அய்யய்யோ தீ. கம்யூனிஸ்டுகள்

நக்சலைட்டுகள் "

 என்று நீங்கள் அனைவருமே 

அச்சம் அலறுவீர்கள்தான்!

- கீழடி பதிப்பகம் துரை.சண்முகம்

https://www.facebook.com/100080904177819/posts/1018690660837730/?rdid=3JuWQS0FXWX61WJ7

=========================================================

4
தலித் பிரதிநிதித்துவத்தின் வரையறை.

கடந்த 22.05.2026 ஆம் நாள் The Hindu நாளேட்டில் வெளியான தமிழ்நாட்டு அமைச்சரவைகளின் தலித் பிரதிநித்துவம் பற்றிய கட்டுரையில் இடம்பெற்ற என்னுடைய கருத்தையும், புனித பாண்டியன் அவர்களுடைய கருத்தையும் கீழே பார்க்கலாம். என்னுடைய கருத்துக்கு மறுப்பு போல் அவர் கருத்து அமைந்துள்ளது. இதற்கு பின்னர் ஒரு நாள் கழித்து "பிரதிநிதித்துவ மாயை"என்னும் தலைப்பில் தலையங்கத்தையும் எழுதி அவர் வெளியிட்டுள்ளார்.

நிலவும் இன்றைய அமைப்பிற்குள்ளிருந்து கிடைக்கும் பிரதிநிதித்துவம் 

பிரச்சினைகளை தீர்க்கும் என்று நாம் நம்பவில்லை. அது நம்முடைய இலக்கும் அல்ல. ஆனால் அவற்றில் சில மாற்றங்கள் ஏற்படுவதைப் பற்றி கேட்கப்படும் போது நம்முடைய கருத்துகளை வெளிப்படுத்துகிறோம். இது நிலவும் அமைப்பிற்குள் நடைபெறும் மாற்றம் தான் என்பதை புரிந்து கொண்டே அக்கருத்துகளை சொல்லுகிறோம். அவ்வளவே.

தலித் பிரச்சினைகளில் சாதி இந்துக்களை விட தலித் பிரதிநிதிகள் கூடுதலாக செயல்பட முடியும் என்பதற்காகவும், அவர்கள் பிரச்சினைகளில் எல்லோருக்கும் பொறுப்பிருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த பிரதிநிதித்துவம் அனுமதிக்கப்பட்டது. பாபாசாகேப் அம்பேத்கர் கோரிய பிரதிநிதித்துவம் இதுவல்ல என்றாலும் அவர் போராடி வந்ததன் தொடர்ச்சியிலேயே இப்பிரதிநித்துவம் சாத்தியமானது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதுவரை இரண்டு விசயங்கள் இங்கு நடந்திருக்கவில்லை. 

1. தலித்துகளுக்கு அமைச்சரவைகளில் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை.

2. பிரதிநித்துவம் வழங்கப்பட்டவர்களும் தலித் பிரச்சினைகளின் / திட்டங்களின் போது சட்டம் மற்றும் தார்மீகம் சார்ந்து அம்மக்கள் சார்பாக நடந்து கொண்டதில்லை. அதற்கு அப்பிரதிநிதிகள் சார்ந்த கட்சிகளில் சொல்லியும் சொல்லப்படாமலும் இருக்கும் தடையே காரணம். இவர்களோடு ஒப்பிடும்போது பிற பிரதிநிதிகள் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தத்தம் சாதியினருக்கு ஆதரவாக இயங்கி வந்திருக்கின்றனர். அவற்றை இக்கட்சிகள் தடுத்ததில்லை. சாதி இந்துக்களின் ஓட்டிற்காக இக்கட்சிகள் வெளிப்படுத்தி வரும் பாகுபாடுகளே இவை.

இப்பின்னணியில் தான் தவெக அரசின் அமைச்சரவை பிரதிநிதித்துவத்தை நாம் அணுக வேண்டும். தலித்துகள் விசயத்தில் பிற கட்சிகளின் அணுகுமுறையிலிருந்து தவெக பெரிய மாற்றங்களை தந்துவிடும் என்று நாம் நம்பவில்லை. இந்த விதத்தில் புனித பாண்டியன் தி இந்துவில் வெளிப்படுத்தியிருக்கும் கருத்தில் கூட நமக்கு முரண்பாடில்லை.

ஆனால் இப்போதைக்கு அமைச்சரவை பிரதிநிதித்துவத்தில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது. பிரதிநிதித்துவம் மட்டுமல்ல முக்கிய துறைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. சாதியம் கூர்மை பெற்றிருக்கும் காலத்தில் தலித்துகள் பிற துறைகளை ஏற்று திறம்பட செயற்படுவது கூட அதன் வெம்மையை தணிக்க உதவலாம்.அதேவேளையில் தலித்துகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் இத்தகைய  பிரதிநித்துவமும் முக்கிய துறைகளும் தவெக பற்றி பிற சாதியினர் மத்தியில் பரப்பப்படப்போகும் பிம்பம் என்னவாக இருக்கும் என்பதையும் இவற்றில் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்த நிலையில் புனித பாண்டியன் இத்தலையங்கத்தில் இரண்டு விசயங்களை செய்திருக்கலாம்.

1) தவெகவின் நோக்கத்தை விரிவாக கட்டுடைத்திருக்கலாம் அல்லது அளிக்கப்பட்ட பிரதிநிதித்துவத்தை எவ்வாறு அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டும் என்று பேசியிருக்கலாம்.

2) பெரியாரின் பெயரால் அவர் ஆதரிக்க விரும்பும் திராவிட கட்சிகளில் இந்த 59 ஆண்டுகளில் விகிதாச்சாரப் படி கொடுக்கப்படாத பிரதிநிதித்துவத்தையும், கொடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தலித் பிரச்சினைகளில் வாளாவிருந்ததையும் அவர் விமர்சித்திருக்க வேண்டும்.

1930 களில் தலித் பிரதிநிதிகளுக்கு காங்கிரஸ் அரசில் இடமளித்த போது அரிஜன மக்கள் பிரச்சினைகளில் இப்பிரதிநிதிகளின் தலையீட்டிற்கு இருக்கும்  சுதந்திரத்தை ஆட்சியோ கட்சியோ கட்டுப்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையை காந்தியின் அரிஜன் சேவா சங்கம் காங்கிரஸிடம் கேட்டுக் கொண்டிருந்தது. இதனை எம். சி. ராஜா குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த இரண்டையும் பேசாமல் தலித் பிரதிநிதித்துவத்தில் அமைச்சரவையில் இடம்பெற்ற அரசியல் கட்சியையும், பிரதிநிதித்துவத்தை வரவேற்றிருப்பவர்களையும் சாடுவதற்கே இத்தலையங்கத்தில் அதிகம் இடமளித்திருக்கிறார். (இந்த தலையங்கத்திற்குப் பிறகு சன் நியூஸ் தொலைக்காட்சியில் அளித்த நேர்காணலில் விசிகவை நேரடியாக விமர்த்திருக்கிறார். )

இப்போது கூட ஒன்றும் முடிந்துவிட வில்லை. ஆட்சிகள் இருக்கட்டும். அவர் ஆதரிக்க விரும்பும் கட்சிகளின் நிர்வாகத்தில் தலித்துகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் தேவை என்ற விமர்சனத்தையோ போராட்டத்தையோ  அவர் தொடங்கலாம். பலரும் அவரை ஆதரிக்கவே செய்வர்.

நாம் ஓரிடத்தில் எதிர்பார்க்கும் நீதி, தான் விரும்பும் இடத்திலும் இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்வது நல்லது.

இந்து செய்தியின் இணைப்பு பின்னூட்டத்தில் தரப்பட்டுள்ளது. (https://www.thehindu.com/news/national/tamil-nadu/historic-shift-vijays-cabinet-marks-tamil-nadus-best-sc-representation-till-date/article71007377.ece?fbclid=IwY2xjawSJ4eNleHRuA2FlbQIxMABicmlkETFPZXpXaUc2NDc1NzJqWUpSc3J0YwZhcHBfaWQQMjIyMDM5MTc4ODIwMDg5MgABHqaJtA4Qjx2ZQ35g0cfOcACtktN0nXoX95Md7KaCBwkBZBOq34jXU8SebtV3_aem_PMRDRW_wfkCgLsJJJycumw)

ஸ்டாலின் ராஜாங்கம்

https://www.facebook.com/100000009806287/posts/27534788296104793/?rdid=ZDd6zhA4zMOlnc6P

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு