பெஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலும் பா.ஜ.க. வின் தாக்குதலும் - பம்மும் எதிர்க்கட்சிகளும்!
துரை. சண்முகம்

காஷ்மீர் பெஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். உடனடியாக ராணுவமம் போலீஸ் உதவியற்ற சூழலில் அங்குள்ள காஷ்மீர் மக்கள் குறிப்பாக இஸ்லாமிய தொழிலாளர்கள் மக்களை துணிச்சலுடன் போராடி காப்பாற்றினார்கள். அவர்களுக்கு ஆறுதல் சொல்லி உதவி செய்தார்கள். இதை அங்கு தமது உறவுகளை பறிகொடுத்த பல சுற்றுலா பயணிகள் திறந்த மனதுடன் “அவர்கள் எங்கள் சகோதரர்களைப் போல உதவினார்கள்” என உலகத்திற்கு சொன்னார்கள்.
முக்கியமாக சையது சா உசேன் எனும் குதிரை ஓட்டி தொழிலாளி சுற்றுலாப் பயணிகளை காப்பாற்றப் போராடி பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டு தன் உயிரை இழந்தார். இப்படி மக்கள் தங்களுக்குள் மதங்களைக் கடந்து பயங்கரவாத தாக்குதலுக்கு இடையே மனித உறவாக தங்களை வெளிப்படுத்திக் கொண்டனர்.
காஷ்மீர் மக்களை ஒடுக்குவதற்கு பல கம்பெனி இராணுவங்களை குவித்து வைத்திருக்கும் பாஜக அரசு சம்பவம் நடக்காமல் இருப்பதற்கான எந்த உத்தரவாதமும் பாதுகாப்பும் அமைக்க துப்பில்லாமல், இந்த சம்பவத்தை சாக்கிட்டு பயங்கரவாதம்- பாகிஸ்தான் என்று நூல் பிடித்து அப்படியே இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரமாக தனது தாக்குதலை சமூக ஊடகங்கள் வழி நடத்துகிறது.
இதை அரசியல் ரீதியாக தங்களுடைய பாசி செய்ததற்கு போராட்டத்தின் ஒரு பகுதியான கடமையாக கருதி எதிர்த்து முறியடிக்க அருகதையற்ற இந்தியா கூட்டணி கட்சிகள் பாஜகவின் தேசிய வரிக்கு ஆதரவாக ராணுவத்தை ஆதரிக்கிறேன் எனும் சாக்கில் வீதிகளில் காவிக்கு கையாளாக கொடி பிடித்தது. குறிப்பான தருணங்கள்தான் அரசியல் சந்தர்ப்பவாதிகளையும் பிழைப்புவாதிகளையும் அடையாளம் காட்டுகிறது. மக்களுக்கும் அடையாளம் காட்டியது.
தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையில் முத்தரசன் திருமாவளவன் வரை பா.ஜ.க.அரசின் போலி தேசியவெறிக்கு ராணுவத்தை பாராட்டுவதாக சொல்லிக் கொண்டு பாஜகவின் அரசியல் தாக்குதலுக்கு அடிபணிந்தனர்.
“செந்தூர்” நடவடிக்கையின் போது
அரசுக்கு முழு ஆதரவு தருகிறோம்!"
என்று ஒத்துழைத்த இந்தியா கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளிடம் தனது செயலுக்கு ஒப்புதல் பெற்றது பாஜக அரசு. ஆனால் பெஹல்காம் தாக்குதலைப் பற்றிய விசாரணை மற்றும் என்ன தவறுகளால் நடந்தது? என்பவைகளைப் பற்றி எதிர்க்கட்சிகளை நாடாளுமன்றத்தில் கூட்டி வைத்து விளக்கம் சொல்ல கூட அவசியமில்லை என்ற ஆணவத்துடன் பாஜகவின் செயல்பாடுகள் அமைந்தது.
மார்க்சிஸ்ட் கட்சிகள் போன்றவைகள் இது பற்றி குரல் எழுப்பினாலும், குறிப்பாக தாக்குதல் விசயத்தில் மக்களை பாதுகாக்கத் தவறிய பாஜக அரசை அம்பலப்படுத்தி மக்கள் மத்தியில் இயக்கம் நடத்தி அதன் போலி தேசபக்தியை தோலுரிக்க வேண்டிய அரசியல் நடவடிக்கை வெறும் முணுமுணுப்பாக முடித்துக் கொண்டன.
முக்கியமாக இந்த தாக்குதலுக்குப் பிறகு இந்தியா கூட்டணி நாடு தழுவிய வகையில் பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு மற்றும் காஷ்மீர் அதன் கையாலாகாத தனம், காஷ்மீர் மக்களின் மீதான அரசியல் ஒடுக்கு முறை போன்றவைகளை மக்களிடம் அரசியல் பேசாமல் இயக்கமாக கொண்டு சென்றிருக்க வேண்டும்.
பாகிஸ்தான்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது! என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே பயங்கரவாதிகளின் இலக்குகள் மீதான தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தான் அரசிடம் சொல்லிவிட்டோம் என்றும் இந்த அரசு சொல்கிறது. இது பற்றியெல்லாம் நாடாளுமன்றத்தை கூட்டி அரசியல் ரீதியாக விவரித்து பாஜகவின் பலவீனங்களை மக்கள் மத்தியில் அரசியல் படுத்த வேண்டியதை செய்வதை விட்டுவிட்டு இதன் தொடர்ச்சியாக உலக நாடுகளிடம் சென்று இந்திய அரசு தரப்பை நியாயப்படுத்தவும் பாகிஸ்தான் தரப்பு பயங்கரவாத ஊக்குவிப்பை பிரச்சாரம் செய்யவும் பாஜக அரசு அமைத்துள்ள வெளிநாடு பயண எம். பி. கள் குழுவில் மார்க்சிஸ்ட் கட்சி எம்பிக்கள் வரை இடம்பெற்று காவிய அரசியலுக்கு காவடி தூக்க புறப்பட்டு விட்டார்கள்.
பாகிஸ்தானில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி கூட மிகத் தெளிவாகவும் பொறுப்பாகவும் உழைக்கும் மக்கள் கண்ணோட்டத்தில் இந்த பிரச்சனையை அணுகியது.
இங்கு பாசிசை எதிர்ப்புக்கு எந்த ஒரு குறிப்பான செயல்திட்ட நிர்ப்பந்தமும் இல்லாமல், இப்போது கூட பாராளுமன்றத்தை கூட்டி வாதித்து வாதம் செய்ய ஒத்துக்கொண்டால் நாங்கள் எம்பிக்கள் குழுவில் இடம் பெறுவோம்! என எந்த ஒரு நிர்ப்பந்தமும் கொடுக்காமல் ஏழு குழுவாக அரசியல் டூருக்கு கிளம்பி விட்டார்கள்.
இந்தப் பக்கம் மக்களுக்கு பாசிச பாஜகவை எதிர்க்கிறோம்! அதன் இஸ்லாமிய வெறுப்பை கண்டிக்கிறோம்! என பிரச்சாரம் செய்கிறார்கள். அந்தப் பக்கம் ஆளும் வர்க்கத்தின் ஊது ஊழலாக பாசிச பாஜக அரசு தரப்பு நியாயத்தை உலக நாடுகளுக்கு சென்று ஓதப் போகிறார்களாம்!
ஏன்? இதை அரசு தரப்பு அதிகார வர்க்கமே செய்ய முடியும். இங்கிருந்து எம்.பி.க்கள் போய் தான் அதுவும் வெவ்வேறு வகையில் போர் பயங்கரவாதிகளாக இருக்கும் நாடுகளிடம் சென்று இவர்கள் பயங்கரவாதத்தைப் பற்றி வகுப்பெடுக்கப் போகிறார்களாம்!
முன்பு ராஜபக்சேவிடம் போய் இவர்கள் கழட்டியது என்ன? ஈழ உரிமை இருக்கட்டும், இங்கே இருக்கும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு கூட உரிமைகள் வாங்கித் தர இவர்களது பதவிகளால் எந்த பயனும் இல்லை என்பதுதான் உண்மை.
முழுக்க முழுக்க இது பாஜக அரசின் செயல்தந்திர இணைப்பில் சேர்ந்து கொள்ளும் வலது அரசியல் சந்தர்ப்பவாதம்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் நாடு அடிமைப்பட்டு கிடந்த போது பாராளுமன்றத்தில் பெஞ்சை தேய்த்துக் கொண்டிருந்த எம்பிக்களை பார்த்து அன்று பகத்சிங் சொன்னான்,” இங்கு உங்களுக்கு என்ன வேலை?
அடிமை பாராளுமன்றத்தில் இருப்பதை விட மக்கள் பிரதிநிதிகள் அந்தந்த தொகுதிகளுக்கு சென்று நாட்டின் விடுதலைக்காகவும் மக்களுக்காகவும் போராடுங்கள் அதுதான் உருப்படியான வேலை!”
எனும் பொருளில் அறிவுறுத்தினார்
தோழர் பகத்சிங்.
இந்தியா கூட்டணி ஆளும்வர்க்க நோக்கில் இந்துத்துவ கூட்டணியிலும் கை நினைப்பது தற்செயலான அரசியல் அல்ல.
முழுக்க முழுக்க நாடாளுமன்ற வாதத்துக்கு தம்மை ஒப்பு கொடுத்துவிட்டு, மக்கள் மன்றத்தில் தனிமைப்பட்டு போகும் அரசியலில் தொடர்ச்சி இது.
- துரை. சண்முகம்
https://www.facebook.com/share/1DB7WL7N4g/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு