உக்ரைனுடனான அமைதி பேச்சுவார்த்தையை தற்காலிகமாக நிறுத்தியது ரஷியா
தினத்தந்தி

இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் சுமார் 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் காசா முனையில் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இதனால், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் ஏமன் மீது வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் நிகழ்த்தி வருகிறது.
இந்த நிலையில் தற்போது ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் குடியிருப்புகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில், தலைநகர் சனாவில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் ராணுவ தலைமையகம், கியாஸ் நிலையம் போன்றவையும் சேதமடைந்தன. இதனால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதேசமயம் கடந்த 10-ந்தேதி ஏமனில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 11 பெண்கள் உள்பட 46 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 2022ஆம் ஆண்டு ரஷியா அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகியும் இந்த போர் முடிவுக்கு வரவில்லை. இரு நாடுகளும் மூர்க்கத்தனமாக மோதிக் கொண்டிருப்பதால், ஏராளமான உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளன. அதோடு கடுமையான பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது. உக்ரைன்–ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன. எனினும், உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்ற புதின், “உக்ரைன் உடனான போரை பேச்சு மூலம் நிறுத்த இன்னும் வாய்ப்பு உள்ளது” என்றார். மேலும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ரஷிய தலைநகர் மாஸ்கோவில் சந்தித்து பேசத் தயாராக இருப்பதாகவும், ஆனால் உறுதியான முடிவுகளை தரும் சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே பேச்சுக்கு தயார் எனவும் தெரிவித்தார்.
ஆனால், பேச்சுக்கான இடமாக மாஸ்கோவை ஏற்க உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்துவிட்டார். இதன் தொடர்ச்சியாக, உக்ரைன் உடனான அமைதி பேச்சு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரஷியா அறிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளின் தலையீடு அதிகமாக உள்ளதால் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
தினத்தந்தி
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு