தேசியக் கொடியை போர்த்திக்கொண்டு கொள்ளையடிக்கிறார் அதானி!

‘413 பக்க பதில்கள்’ நாங்கள் வைத்த குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துகின்றன... - தீக்கதிர்

தேசியக் கொடியை போர்த்திக்கொண்டு கொள்ளையடிக்கிறார் அதானி!

இந்தியாவின் பெரும்பணக்காரரான கவுதம் அதானி, தேசியக் கொடியைப் போர்த்திக் கொண்டு இந்திய நாட்டை கொள்ளையடித்துக் கொண்டிருப்பதாகவும், தன்மீதான மோசடிக் குற்றச்சாட்டுக்களைத் திசைத்திருப்ப ‘தேசியவாதம்’ என்ற கதை கட்டும் வேலையில் இறங்கியிருப்பதாகவும் ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ (Hindenburg Research) நிறுவனம் கடுமையாகச் சாடியுள்ளது. கொரோனாவுக்கு பிந்தைய 2 ஆண்டுகளில் அதானி குழும நிறுவனங்களின் சொத்து மதிப்பு 819 சதவிகிதம் அதிகரித்த நிலையில், இதுதொடர்பாக ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. அதன் முடிவில், கடந்த ஜனவரி 25 அன்று அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டது. அதில், “அதானி குழுமத்தின் வளர்ச்சி உண்மையானது அல்ல. அதானி குழும நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்வைக் காட்டி மிக அதிக அளவில் கடன் பெற்றுள்ளன. முதலீட்டாளர்களையும் ஏமாற்றி வருகிறது. அதானி குழும நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முறைகேடுகள் செய்துள்ளன. அதானி குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர்” என்று கூறியிருந்தது.

காணாமல் போன 4 லட்சம் கோடி

இந்த அறிக்கை, அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதானி குழும பங்கு மதிப்பு, இரண்டே நாட்களில் ரூ. 4 லட்சத்து 17 ஆயிரம் கோடி அளவிற்கு காணாமல் போனது. உலகப் பணக்காரர்கள் வரிசையில், கடந்த ஜனவரி 25 வரை 3-ஆவது இடத்தில் இருந்த கவுதம் அதானி, ஜனவரி 27 அன்று 7-ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். அவரின் சொத்து மதிப்பு 96.5 பில்லியன் டாலர்களாக சரிந்தது. இந்நிலையில், ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ நிறுவனத்திற்கு, அதானி குழுமம் 413 பக்க பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், “ஹிண்டன்பர்க் அறிக்கை என்பது இந்தியா மீதான திட்டமிட்ட தாக்குதல். இந்திய அமைப்புகள், அதன் வளர்ச்சிகள் மீதான தாக்குதல்’ என்று அதானி குழுமம் கூறியிருந்தது. இதற்கு ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ நிறுவனமும் தற்போது வலுவான பதிலடியை அளித்துள்ளது. “செய்த தவறுகளை தேசியவாதத்தின் பெயரில் குழப்ப முடியாது. நாங்கள் எழுப்பிய ஒவ்வொரு குற்றச்சாட்டையும் இதுபோன்ற விளக்கங்களால் தவிர்க்க முடியாது” என்று கூறியுள்ளது.

‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ அளித்துள்ள பதிலடி

ஜனவரி 24 அன்று, உலகின் அப்போதைய மூன்றாவது பெரிய பணக்காரரால் நடத்தப் படும் இந்தியாவின் 2-ஆவது பெரிய நிறுவனமான அதானி குழுமத்தில் மோசடி நடந்ததாகச் சந்தே கிக்கப்படும் பல சிக்கல்களை கோடிட்டுக் காட்டும் அறிக்கையை நாங்கள் வெளியிட்டோம். அதற்கு அதானி ‘413 பக்க பதில்’ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதில், “பங்குப் பத்திரங்கள் மற்றும் அந்நியச் செலாவணி சட்டங்களை நாங்கள் அப்பட்டமாக மீறியுள்ளோம்” என்று அதானி கூறி யுள்ளார். ஆனால், எந்த வகையில், நாங்கள் சட்டங்  களை மீறியிருக்கிறோம் என்று குறிப்பிட்டு ஒன்றை யும் சொல்லவில்லை.  எங்களின் அறிக்கை, “இந்தியாவின் மீது நடத்தப்  பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதல்” என்று அதானி கூறியிருக்கிறார். இந்த கடுமையான குற்றச்  சாட்டை நாங்கள் மறுக்கிறோம். இதன்மூலம் தன்மீதான பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைத் திருப்ப அதானி முயல்கிறார். அதானி குழுமம் அதனுடைய வானளாவிய வளர்ச்சி மற்றும் அதன் தலைவர் கவுதம் அதானி யின் செல்வ வளர்ச்சியை இந்தியாவின் வளர்ச்சியாக  காட்ட முயல்கிறது. அதற்காக ஒரு தேசியவாத கதை யை கட்டுகிறது. நாங்கள் அதனை ஒப்புக்கொள்ள மாட்டோம்.  தெளிவாகச் சொல்வதானால், இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயகம் மற்றும் அற்புதமான எதிர்  காலத்துடன் வளர்ந்து வரும் வல்லரசு என்று நாங்கள் நம்புகிறோம். அதே வேளையில், இந்திய தேசிய கொடியை தன்மீது போர்த்திக் கொண்டு, இந்திய தேசத்தை திட்டமிட்டு கொள்ளையடிக்கும் அதானி குழுமத்தால், இந்தியாவின் வளமான எதிர்காலம் தடுக்கப்படுகிறது என்பதையும் நாங்கள் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறோம்.

மோசடி மோசடிதான்

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவ ரால் மோசடி செய்யப்பட்டாலும், மோசடி என்பது மோசடிதான் என்று நாங்கள் நம்புகிறோம். அதானி குழுமத்தின் ‘413 பக்க’ பதிலில், எங்கள் அறிக்கைக்கு பதிலளிக்கும் விஷயங்கள், சுமார் 30 பக்கங்களில் மட்டுமே உள்ளன. 330 பக்கங்களில் நீதிமன்றப் பதிவுகள், 53 பக்கங்களில் உயர்மட்ட நிதி நிலை, பொதுத் தகவல்கள் மற்றும் பெண் தொழில் முனைவோர் மற்றும் பாதுகாப்பான காய்கறிகள் உற்பத்தியை ஊக்குவிக்கும் விதம் போன்ற எங்க ளின் கேள்விகளுக்கு சம்பந்தமே இல்லாத விவ ரங்களே இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, அதானி குழும பதிலின் பக்கம் 24-ஐ காணலாம். எங்களின் 88 கேள்விகளில் 62 கேள்விகளுக்கு அதானி குறிப்பாக பதிலளிக்கத் தவறியுள்ளார். பதில ளித்த கேள்விகளிலும், எங்களின் குற்றச்சாட்டுகளிலி ருந்து விலகி ஓடுவதற்கே முயன்றுள்ளார். இன்னும் சில கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்களில், எங்களின் குற்றச்சாட்டை அவரே மறைமுகமாக உறுதிப்படுத்தியிருக்கிறார்.

‘ஷெல்’ நிறுவனங்கள்

கடல்சார் நிறுவனங்களுடனான பணப் பரிவர்த்த னைகள் தொடர்பாக நாங்கள் சந்தேகம் எழுப்பி யிருந்தோம். அந்த கேள்வி அதானி குழுமத்தால் கண்டுகொள்ளப்படவே இல்லை. அதானி குழும மானது, அதன் தலைவரின் (கவுதம் அதானியின்) சகோதரர் வினோத் அதானி மற்றும் அவரது கடல் கடந்த ‘ஷெல்’ நிறுவனங்களுடன் (Offshore Shell  Entities- உற்பத்தி ஏதும் நடக்காத வெறும் லெட்டர்  பேடு கம்பெனிகள்) சந்தேகத்திற்குரிய வகையில் பில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்களில் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதாக எங்கள் அறிக்கை குற்றம் சாட்டியிருந்தது. இந்த பரிவர்த்த னைகள் பங்கு மற்றும் கணக்கியல் கையாளுதல் பற்றிய தீவிரமான குற்றச்சாட்டை முன்வைப்பன வாகும். கவுதம் அதானியின் மூத்த சகோதரரான வினோத்  அதானியால் வழிநடத்தப்படும் அல்லது அவருடன் தொடர்புடைய வெளிநாட்டு ‘ஷெல்’ நிறுவனங்களின் (இந்த நிறுவனங்களில் மொரிஷியஸில் உள்ள 38 நிறுவனங்களும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சைப்ரஸ், சிங்கப்பூர் மற்றும் பல்வேறு கரீபியன் தீவுகளில் உள்ள நிறுவனங்களும் அடங்கும்) செயல்பாடு பற்றி எங்கள் அறிக்கை விவரித்துள்ளது.  

இந்த நிறுவனங்கள் (1) ஸ்டாக் பார்க்கிங் / ஸ்டாக்  மேனிபுலேஷன் (2) அல்லது அதானியின் கணக்கி யலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதற்கான விரிவான ஆதாரங்களை நாங்கள் வழங்கினோம். எங்களின் பல கேள்விகளில், இந்த ‘ஷெல்’ நிறு வனங்களுடனான அதானி குழுமத்தின் பரிவர்த்த னைகளின் தன்மை மற்றும் அதுதொடர்பான நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாமை குறித்து கேட்டிருந்தோம். இந்தக் கேள்விகளுக்கு, வினோத் அதானி தொடர்புடைய ‘ஷெல்’ நிறுவனங்களுடன் தங்களுக்கு பரிவர்த்தனைகள் இருப்பதை மறுக்காத அதானி குழுமம், அதிலுள்ள முறைகேடு தொடர்பான குற்றச்  சாட்டை மட்டும் தெளிவுபடுத்தாமல் விலகிக் கொள்கிறது. வினோத் அதானி நிறுவனம், அதானி குழுமத்து டன் தொடர்புடையது அல்ல என்றும், வினோத் அதானி நிறுவனங்கள் மற்றும் அதானி குழுமத்தின் இடையிலான பில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்கள் பரிவர்த்தனைகளில் முரண்பாடுகள் எதுவும் இல்லை என்று மட்டும் அதானி குழுமம் வாதிட்டுள்ளது.

பில்லியன் கணக்கில்  டாலர் வந்தது எப்படி?

நாங்கள் கேட்டதோ, அதானி குழுமத்தின் மூலம் வினோத் அதானியுடன் தொடர்புடைய ‘ஆப்ஷோர் ஷெல்’ நிறுவனங்களிலிருந்து வந்த பில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்களின் மூலத்தைப் பற்றியது...! உதாரணமாக, வினோத் அதானி இயக்குநராகப் பணியாற்றும் மொரீஷியஸ் நிறுவனத்திடமிருந்து பெற்ற 253 மில்லியன் டாலர் கடன், வினோத் அதானி யால் கட்டுப்படுத்தப்படும் மொரீஷியஸ் நிறுவனத்திட மிருந்து பெறப்பட்ட 692.5 மில்லியன் டாலர் முதலீடு பற்றி கேட்டிருந்தோம். இதில் கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானியின் நிறுவனங்களுக்கான ‘நிதி ஆதாரம்..?’ பற்றிய சந்தேகத்தை எழுப்பியிருந்தோம். அதானி குழும நிறுவனங்களுக்கும், வினோத் அதானியுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் இடையிலான சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனை களுக்கு இந்த ‘நிதி ஆதாரம்’தான் முக்கியமானது. அதற்கான பதிலை வைத்துத்தான் ‘அதானி குழுமம்,  தனது பங்குகளின் மதிப்பை உயர்த்த, இந்த கடன்  மற்றும் முதலீடுகளைப் பெற்று, மோசடியில் ஈடு பட்டதா?’ என்பதற்கான விடையைப் பெற முடியும். ஆனால், இந்தக் கேள்விகளுக்கு அதானி குழுமம் நேரடியான மற்றும் வெளிப்படையான பதில் எதையும் அளிக்கவில்லை. “அவர்களின் (சகோதரர் வினோத் அதானி நடத்தும் நிறுவனங்களின்) ‘நிதி  ஆதாரம்’ பற்றி எங்களுக்குத் தெரியாது அல்லது தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் இல்லை” யாம். [பக்கம் 35] இதுதான் அதானி குழுமம் அளித்தி ருக்கும் பதில். மேலும், “திரு. வினோத் அதானியின் வணிக பரிவர்த்தனைகள் மற்றும் பரிவர்த்தனைகள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரி விக்கும் நிலையில் இல்லை” என்றும் அதானி குழுமம் சமாளித்துள்ளது. [பக்கம் 41]

வினோத் அதானி அல்லது அதானி குழுமத்தின் குடும்ப முதலீட்டு அலுவலகத்தின் தலைவர் (வினோத்  அதானி), இயக்குநராகப் பணியாற்றிய நிறுவனங்க ளில் இருந்து வந்த முதலீடுகள் பற்றி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினோம். கவுதம் அதானிக்கு அவரது சகோதரர் வினோத்  அதானி ஏன் பெரும் தொகையை கடனாக கொடுத்  தார்? மேலும், அதற்கான பணம் வினோத் அதானிக்கு எங்கிருந்து வந்தது?- என்று கேட்டிருந்தோம். இந்தக் கேள்விகளுக்கு “தெரியவில்லை” என்று கவுதம் அதானி பதில் கூறுகிறார். உண்மையாக இருந்தால் அதனை நாமும் நம்புவோம். ஆனால், கவுதம் அதானி தனது சகோதரரிடம் விசாரிப்பது மூலமோ, அல்லது அடுத்த குடும்ப இரவு விருந்தின்போது கேட்பதன் மூலமோ மர்மத்தை எளிதில் தெளிவுபடுத்த முடியும். ஏன், அவர் (வினோத் அதானி)கவுதம் அதானியின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு- மர்மமான வெளிநாட்டு ‘ஷெல்’ நிறுவனங்களின் நெட்வொர்க் மூலம் பில்லியன் கணக்கான டாலர்களை அனுப்புகிறார் என்பதை அறிந்து கொள்ள முடியும்.  ஆனால், ஒரேயடியாக எதுவுமே “தெரியாது” என்கிறார். குறைந்தபட்ச அறிவுடையவர்கள் கூட இவ்வாறு கூறமாட்டார்கள். சந்தேகத்திற்குரிய ‘ஆப்ஷோர் ஸ்டாக் பார்க்கிங்’  நிறுவனங்களுக்கும் (வெளிநாடுகளில் முதலீடு  செய்யப்பட்டிருப்பதாக கூறப்படும் பங்குகளை நிர்வ கிக்கும் நிறுவனங்கள்) அதானி விளம்பர தாரர்களுக்கும் இடையே உள்ள முறைகேடுகள் மற்றும் தொடர்புகளை எங்கள் அறிக்கை தெளி வாகவே கோடிட்டுக் காட்டியிருந்தது. ஆனால், அதானி குழுமமோ, ‘தங்கள் நிறுவனங்களின் பெரும்பாலான பங்குகளை வைத்திருப்பவர்கள் யார் என்றே தெரியாது’ என்று கூறுகிறது.  எங்கள் அறிக்கையின் பெரும்பகுதி, அதானி குழும நிறுவனங்களில் பில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பங்குகளைத் தவிர வேறு எதையும் வைத்திருப்பதாகத் தோன்றாத- அதேநேரம் பெரும்பாலும் வினோத் அதானியுடன் தொடர்பு கொண்ட, மர்மமான கடல்கடந்த நிறு வனங்களை அடையாளம் காட்டியது. சந்தேகத் திற்குரிய மொரீஷியஸ் நிறுவனங்கள், அதானி குழும நிறுவனங்களில் அதிகளவிலான பங்குகளை வைத்திருப்பதை அம்பலப்படுத்தியது.

‘அமிகார்ப்’ ஊழல் கம்பெனி உதவியுடன்

வரலாற்றில் மிகவும் மோசமான சர்வதேச மோசடி மற்றும் பணமோசடி ஊழல்களில் ஒன்றான 1எம்டிபி (1Malaysia Development Berhad scandal - 1MDB) ஊழலில் ஈடுபட்டுள்ள ‘அமிகார்ப்’ (Amicorp) உதவியுடன் சந்தேகத்திற்குரிய பல பங்கு பார்க்கிங் நிறுவனங்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதையும் வெளிக்கொண்டு வந்தோம். குறிப்பாக, சுமார் 7 அதானி புரோமோட்டர் நிறு வனங்கள், சகோதரர் வினோத் அதானியுடன் தொடர்புடைய குறைந்தபட்சம் 17 ஆப்ஷோர் ஷெல்கள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் அதானி யின் பங்குகள் மீது குறைந்தபட்சம் மொரீஷியஸை தளமாகக் கொண்ட 3 ஆப்ஷோர் பங்குதாரர்களை உருவாக்கிய ‘அமிகார்ப்’ (Amicorp) நிறுவனத்தின் செயல்பாடு பற்றி குறிப்பிட்டிருந்தோம். ஆனால், ‘1எம்டிபி’ ஊழலில் ஈடுபட்ட ‘அமிகார்ப்’ நிறுவனத்தின் முந்தைய ஊழல்கள் பற்றி, அதானி “கவலை இல்லை” என்கிறார். சந்தேகத்திற்குரிய அந்த ஸ்டாக் பார்க்கிங் நிறுவனங்கள் பெருமளவில் ஒழுங்கற்ற வர்த்த கத்தில் ஈடுபட்டு, 30 சதவிகிதம் முதல் 47 சதவிகிதம் வரையிலான பங்கு வெளியீடுகளைக் கைப்பற்றி, அதானி பங்குகளின் சந்தை மதிப்பை உயர்த்தி யிருப்பதை சுட்டிக்காட்டியிருந்தோம். ஆனால்,  தங்களின் மிகப்பெரிய பங்கு பொது உரிமையா ளர்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முறைகள் பற்றி  எதுவுமே தெரியாது என்று அதானி பதிலளித்துள் ளார். “கேள்விகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு நிறுவனமும் அதானியின் முதன்மை நிர்வாகத்தில் உள்ள பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பொதுப் பங்குதாரர் நிறுவனங்கள் ஆகும். அவர்களின் வர்த்தக முறை அல்லது பொது பங்குதாரர்களின் நடத்தை குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்க முடியாது” [பக்கம் 47-48] என்று அதானி தெரி வித்துள்ளார்.

கவுதம் அதானியின் பினாமியே வினோத் அதானி

அதாவது, வினோத் அதானியின் நிறுவனங்கள், அதானி குழுமத்தின் நிறுவனங்கள் ஆகாது என்று காட்டி தப்பிக்க முயல்கிறார். “எந்தவொரு விளம்பரதாரர் நிறுவனம் அல்லது அவர்களது உறவினர்களின் நெருங்கிய அல்லது வணிக உறவுமுறை மூலமான பரிவர்த்தனையை, தொடர்புடைய நிறுவனத்தின் பரிவர்த்தனையாக மாற்றாது” [பக்கம் 32] என்கிறார். ஆனால், இந்தியக் கணக்கியல் தரநிலைகள், தனிப்பட்ட தரப்பு பரிவர்த்தனைகளைத் தீர்மா னிப்பதற்கான நோக்கங்களுக்காக ஒரு தனிநபரின் சகோதரர் எவ்வாறு அந்த தனிநபரை “செல்வாக்கு செலுத்துவார்” என்று குறிப்பாக விளக்குகிறது. (ஆதாரம்: இந்திய கார்ப்பரேட் விவகார அமைச்சகம் [பக்கம் 3]) நிதிக் கணக்கியல் தரநிலைகள் வாரியம் (Financial Accounting Standards Board - FASB) - முதலீட்டாளர்களுக்கான தொடர்புடைய நிறுவன பரிவர்த்தனைகளின் ஆபத்துகளை உணர்ந்து - நிர்வாகம் மற்றும் அவர்களது உடனடி குடும்ப உறுப்பினர்களின் மேலாண்மை” ஆகியவை தொடர்பு உடையவைகள்தான் என்று கூறுகிறது. அந்த வகையில், வினோத் அதானியின்- அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் குறிப்பி டத்தக்க வெளிப்படுத்தப்படாத உரிமையுடனான- அவரது குடும்ப உறவின் அடிப்படையிலும், பல்வேறு அதானி குழும நிறுவனங்களின் குழுவில் வினோத் அதானியின் பங்கு; மற்றும் கவுதம் அதானியுடன் அவருக்கு இருக்கும் விரிவான மற்றும் ஒழுங்கற்ற பரிவர்த்தனைகள் ஆகியவற்றின் அடிப்படையிலும், வினோத் அதானியை, கவுதம் அதானி தரப்பாகவே கருத வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

பதில் இல்லாக் கேள்விகள்

அதானி பதிலளித்த கேள்விகளில், அவர்கள் எங்கள் அம்பலப்படுத்துதல்களை பெருமளவில் உறுதிப்படுத்தியுள்ளனர். அதேநேரம், எங்களின் கேள்விகளுக்கு உரியவாறு அளிக்கப்படாத பதில்களின் உதாரணங்களையும் இங்கே பட்டியலிடுகிறோம்:

1    அதானி எண்டர்பிரைசஸின் முன்னோடி நிறுவனமான ‘ஏஇஎல்’ (Adani Enterprises Limited - AEL) பங்குகளை கையாடல் செய்ததில் பிரபலமற்ற சந்தை சூழ்ச்சியாளர் கேதன் பரேக்கிற்கு அதானி விளம்பரதாரர்கள் உதவினார்கள் என்று 2007 பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் (SEBI) அளித்த தீர்ப்பின் ஆவணங்கள் எங்கள் அறிக்கையில் எடுத்தாளப்பட்டிருந்தன. “அதானியின் விளம்பரதாரர்கள் அதானி நிலைப்பாட்டை கையாள்வதில் கேதன் பரேக் நிறுவனங்களுக்கு உதவினார்கள் என்று அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன”. [பக்கம் 4] [பக்கம் 46] என்று ‘செபி’ அளித்திருந்த அந்த தீர்ப்பை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.     ஆனால், இதற்கு, “இந்த விவகாரம் முன்பே தீர்க்கப்பட்டுவிட்டது” என்று போகிற போக்கில் அதானி பதிலளித்துள்ளார்.

2     1999 முதல் 2005 வரை அதானி பங்குகளை கையாடல் செய்ததற்காக அதானி விளம்பரதாரர்கள் உட்பட 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது ‘செபி’ விசாரணை நடத்தி வழக்குத் தொடுத்ததற்கான ஆதாரங்கள் எங்கள் அறிக்கையில் இடம்பெற்றிருந்தது. இதுவும் நினைவூட்டப்பட்டு இருந்தது.     வழக்கம்போல, “மற்ற ‘நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு’ எதிரான எந்தவொரு நடவடிக்கை பற்றியும் எங்களுக்குத் தெரியாது, அல்லது நாங்கள் அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை” என்று அதானி குழுமம் சமாளித்துள்ளது- [பக். 29]. இதனை நாம் புரிந்து கொள்ளமுடியவில்லை.

3     வினோத் அதானி “எந்தவொரு அதானி குழும நிறுவனங்களிலும் எந்தவிதமான ஈடுபாடும் கொண்டிருக்கவில்லை” என்று கூறி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளர்களிடம் (SEBI) அளிக்கப்பட்ட அறிக்கை பற்றியும் நாங்கள் கேட்டிருந்தோம். இதுதொடர்பான வாதம் முக்கியமானது. அதானி குழுமம் வினோத் அதானியுடனான பரிவர்த்தனைகள் குறித்து அரசாங்கத்திற்கு வெளிப்படையாக இருந்ததா? என்பதை மையமாகக் கொண்ட கேள்வி இது.     வினோத் அதானி, அதானி குழும நிறுவனங்களின் இயக்குநராக இருந்துள்ளார். ஆகஸ்ட் 2010-இல் அதானி குளோபல், ஏப்ரல் 2011 இல் அதானி ஷிப்பிங் மற்றும் ஏப்ரல் 2011-இல் அதானி பவர் நிறுவனங்களில் அவர் பதவி வகித்துள்ளார். அதன்பின்னரே அவர் விலகியுள்ளார். (‘சிங்கப்பூர் கார்ப்பரேட் ஃபைலிங்ஸ். [பக். 2, பக். 3]’.)     ஆனால், இதனை மறைத்து, “வினோத் அதானி, விசாரணையுடன் தொடர்புடைய நிறுவனங்களில் ஈடுபாடு கொண்டிருக்கவில்லை” என்று செபி-யிடம் பொய்யான தகவலை அதானி குழுமம் அளித்துள்ளது.

    இதுதொடர்பான குற்றச்சாட்டிற்கு, “... மின் இறக்குமதிக்கான அதிக விலைப்பட்டியல் குற்றச்சாட்டுகள் ஏப்ரல் 2010 முதல் ஆகஸ்ட் 2014 வரையிலான காலப்பகுதியைச் சார்ந்தது, அந்த காலகட்டத்தில் திரு. வினோத் அதானி, அத்தகைய விசாரணைகள் தொடங்கப்பட்ட தொடர்புடைய எந்த அதானி நிறுவனங்களிலும் இயக்குநராகக் கூட இல்லை” [பக். 29] என்று தற்போதும் பொய்யான பதிலையே அதானி அளித்துள்ளார்.     சுருக்கமாக கூறுவதானால், எங்கள் அறிக்கை எழுப்பிய மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றான வினோத் அதானியுடனான, அதானி குழுமத்தின் உறவு குறித்து அதானி குழுமம் அரசாங்க அதிகாரிகளை அப்பட்டமாக தவறாக வழிநடத்தியது போலவே தெரிகிறது.

4     பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட அதானி நிறுவனங்கள் கடந்த 12 ஆண்டுகளில் தனியார் ஒப்பந்ததாரர் “திட்ட மேலாண்மை ஆலோசனை”க்கு (Project Management Consultancy) ரூ. 6 ஆயிரத்து 300 கோடி (INR 63 Billion) செலுத்தியுள்ளன. இந்த நிறுவனம் வினோத் அதானியின் நெருங்கிய கூட்டாளியின் மகனால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். நிறுவனத்தைக் கட்டுப்படுத்தும் அதே நபர் “அதானி குழுமத்தின் தைவான் பிரதிநிதி”யாக இருக்கிறார் என்பதைக் காட்டும் தைவானிய ஊடக அறிக்கைகளையும் சேர்த்துள்ளோம். அதானியைப் பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரப்பூர்வ அரசாங்க நிகழ்வில் அவர் அதானி அடையாளத்தை வைத்திருக்கும் படங்களையும் காட்டியிருந்தோம்.

     இவ்வாறு “திட்ட மேலாண்மை ஆலோசனை” நிறுவனத்தின் அந்த கட்டுப்பாட்டாளர் தெளிவாக அதானியின் பிரதிநிதியாக இருந்தபோதிலும், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் இருந்து பணத்தை வெளியேற்றிய பிஎம்சி திட்டங்களுக்கு பெருமளவிலான பணம் செலுத்தப்பட்டது குறித்து தொடர்புடைய தரப்பு வெளிப்பாடுகள் எதையும் நாங்கள் காணவில்லை. அதானியும் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை, அதற்குப் பதிலாக முந்தைய, வருவாய் புலனாய்வு இயக்குநரக (Directorate of Revenue Intelligence - DRI) விசாரணையின் ஆவணங்களைக் குறிப்பிடுகிறார்.

4     பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட அதானி நிறுவனங்கள் கடந்த 12 ஆண்டுகளில் தனியார் ஒப்பந்ததாரர் “திட்ட மேலாண்மை ஆலோசனை”க்கு (Project Management Consultancy) ரூ. 6 ஆயிரத்து 300 கோடி (INR 63 Billion) செலுத்தியுள்ளன. இந்த நிறுவனம் வினோத் அதானியின் நெருங்கிய கூட்டாளியின் மகனால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். நிறுவனத்தைக் கட்டுப்படுத்தும் அதே நபர் “அதானி குழுமத்தின் தைவான் பிரதிநிதி”யாக இருக்கிறார் என்பதைக் காட்டும் தைவானிய ஊடக அறிக்கைகளையும் சேர்த்துள்ளோம். அதானியைப் பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரப்பூர்வ அரசாங்க நிகழ்வில் அவர் அதானி அடையாளத்தை வைத்திருக்கும் படங்களையும் காட்டியிருந்தோம்.    

 இவ்வாறு “திட்ட மேலாண்மை ஆலோசனை” நிறுவனத்தின் அந்த கட்டுப்பாட்டாளர் தெளிவாக அதானியின் பிரதிநிதியாக இருந்தபோதிலும், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் இருந்து பணத்தை வெளியேற்றிய பிஎம்சி திட்டங்களுக்கு பெருமளவிலான பணம் செலுத்தப்பட்டது குறித்து தொடர்புடைய தரப்பு வெளிப்பாடுகள் எதையும் நாங்கள் காணவில்லை. அதானியும் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை, அதற்குப் பதிலாக முந்தைய, வருவாய் புலனாய்வு இயக்குநரக (Directorate of Revenue Intelligence - DRI) விசாரணையின் ஆவணங்களைக் குறிப்பிடுகிறார்.

6     அதானி குழுமத்துடனான சாங் சுங்-லிங்கின் (சீன நாட்டைச் சேர்ந்தவர்) உறவின் தன்மை, வினோத் அதானி உடனான உறவு பற்றியும் அறிக்கையில் கேட்டிருந்தோம். ஆனால், அதானி குழுமம் சீன நாட்டவருடனான (சாங் சுங்-லிங்) உறவை தெளிவுபடுத்தக் கூட முயற்சி செய்யவில்லை. இது ஒரு முக்கியமான விஷயம், பங்குதாரர்களுக்கு மட்டுமன்றி, இந்தியாவின் தேசிய நலனுக்கும் இது முக்கியம்.

காரணம், சாங் சுங் லிங்கால் (லிங்கோ சாங் என்று அழைக்கப்படுபவர்) நடத்தப்படும் ஒரு நிறுவனம் (குடாமி இன்டர்நேஷனல் - Gudami International) இந்தியாவின் மிகப்பெரிய லஞ்ச ஊழல்களில் ஒன்றான ‘அகஸ்டா வெஸ்ட்லேண்ட்’ ஊழலின் ஒரு பகுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. சாங் சுங் லிங்கின் மகன், அதானி குழுமத்தின் முக்கிய ஒப்பந்ததாரரான மேலே குறிப்பிடப்பட்ட ‘பிஎம்சி ப்ராஜெக்ட்ஸ்’ திட்டத்தின் பயனாளி ஆவார்.

எனவே, இவ்வாறு அதானி அளித்துள்ள பதில்கள் எங்களின் அம்பலப்படுத்துதல்களை பெருமளவில் உறுதிப்படுத்தவே செய்திருக்கிறது. பல முக்கியமான கேள்விகளை புறந்தள்ளிவிட்டு தப்பிச்செல்ல முயற்சித்துள்ளது.     ஆனால், அதானியின் பதிலை இன்னும் நாங்கள் நெருக்கமாக ஆராய்ந்து, அடுத்த சில நாட்களில் மேலும் பல உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவோம்.

theekkathir.in /News/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/adhani-robs-by-wrapping-the-national-flag

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு