பசியுடன் உறங்கச் செல்லும் குழந்தைகள் அமெரிக்காவில் 18 சதவீதம் பேர்

தீக்கதிர்

பசியுடன் உறங்கச் செல்லும் குழந்தைகள் அமெரிக்காவில் 18 சதவீதம் பேர்

அதிக அளவு பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஆகியவையே உலகளாவிய பட்டினிக்கு காரணம் என வேர்ல்ட் விசன்  இண்டர்நேஷனல் என்ற மனிதநேய குழு, 16 நாடுகளில் அனைத்து வருமான நிலை களிலும் உள்ள 14,000 க்கும் மேற்பட்டவர்களி டம் நடத்திய கருத்துக் கணிப்பு  ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. அக்டோபர் 11 திங்கட்கிழமை  சர்வதேச உணவு தினத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, சர்வதேச அரங்கில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.அந்த  ஆய்வில்  59 சத வீதமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைக ளின்  பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு குறித்து மிகவும் கவலை கொண்டுள்ளதாகவும், 46 சதவீதமானோர் ஊட்டச்சத்துள்ள உணவு வாங்க தேவையான பொருளாதார வேலைகள் கிடைப்பதில்லை எனவும் கூறியுள்ளனர்.  37 சதவீத பெற்றோர்கள் தங்கள் குழந்தை களுக்கு  ஒவ்வொரு நாளும் சரியான ஊட்டச் சத்தை கொடுக்க முடியவில்லை எனவும்  21 சதவீதமானோர் கடந்த மாதம் தங்கள் குழந் தைகள் முறையான உணவின்றி பட்டினியாக இருந்ததாகவும்  கூறியுள்ளனர். அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஆய்வில்  18 சதவீதமான மக்கள்   தங்கள் குழந்தைகளில் ஒருவர்  பசியுடன் தூங்கும் நிலைக்கு சென்றதா கக் கூறியுள்ளனர். மேலும் அடிப்படை ஊதியம்  இல்லாத  நாடுகளில்  பசியுடன் படுக்கைக்குச் செல்லும் குழந்தைகளின் அளவு  38 சத வீதத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

பசி என்பது ஒரு நாடு அல்லது உலகின் ஒரு பகுதிக்கு மட்டுமானதல்ல,அது ஒரு சர்வதேச பிரச்சனை என வேர்ல்ட் விஷன் இண்டர் நேஷனல் அமைப்பின் தலைவர் ஆண்ட்ரூ மோரேலி ஒரு அறிக்கையில் தெரிவித்துள் ளார். தங்கள் குழந்தைகள் பசியுடன் உறங்கச் சென்றதற்கு முக்கியக் காரணம் பணவீக்கம் மற்றும் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு ஆகியவையே என 46 சதவீதமானோரும்  குறைவான குடும்ப  வருமானம் என  39 சதவீத மானோரும் , பசியை நீக்க அரசு போதுமான  கவனம் செலுத்தாதது  காரணம் என 25 சதவீதமானோரும்  கூறியுள்ளனர். கொரோனா தொற்று மற்றும் உக்ரைன்- ரஷ்யா போரால் உலகளவில் அதிகரித்த  பொரு ளாதார நெருக்கடி  அனைத்து நாடுகளையும் பாதித்துள்ளது.  பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செல வினங்கள்  அதிகரிப்பு ஆகிய காரணத்தால் 16 நாடுகளில் 11 நாடுகளின் குழந்தைகளின் மீதான பசி மிக அதிகளவில் உள்ளது சுட்டிக் காட்டப்பட்டது. இது பங்களாதேஷில் மட்டும்  70 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆனால் வளர்ந்த நாடுகளான  கனடா (68%), ஆஸ்தி ரேலியா (66%),  பிரிட்டன் (66%) போன்ற பணக் கார நாடுகளில் அதிக குழந்தைகள் அத்தியா வசியப்  பொருட்களின் விலை உயர்வால்  வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர் என்பது மிக முக்கியமானதாகும்.

- தீக்கதிர்

https://theekkathir.in/News/world/America/18-percent-of-children-in-the-united-states-go-to-bed-hungry

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு