482 நம்பிக்கை மையங்களை முடக்கியுள்ளது திமுக அரசு

திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளது

482 நம்பிக்கை மையங்களை முடக்கியுள்ளது திமுக அரசு

பத்திரிக்கை செய்தி

பெறுதல்,

*ஆசிரியர்கள் /நிருபர்கள்*  

*186 -   எச்ஐவி/எய்ட்ஸ் ஆலோசனை மற்றும் பரிசோதனை செய்யும் நம்பிக்கை மையங்களை மூட தமிழக அரசு உத்திரவு*

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில்  777- எச்ஐவி- ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் 186 - மையங்களை மூட மத்திய அரசு 5-7-23 அன்று தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு நிறுவனத்திற்கு சுற்றிரிக்கையை அனுப்பியது.

 186 - நம்பிக்கை மையங்களை மூடினால் தமிழகத்தில் எச்.அய்.வி தடுப்பு திட்டம் முடங்கும் சூழ்நிலை ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் பலகட்ட போராட்டங்களை நடத்தியது.

மேலும் 17-8-23 அன்று தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பாக சென்னை திட்ட இயக்குனர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தினோம்.அப்பொழுது நடத்திய பேச்சுவார்த்தையில் TANSACS- திட்ட இயக்குனர் அவர்கள் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை திட்டத்தை  செயல்படுத்த மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது.அதனால் *நம்பிக்கை மையங்களை மூட மாட்டோம்* என்று உத்தரவாதம் அளித்தார்.

மேலும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் *த.தமிழச்சி தங்கபாண்டியன்* அவர்கள் 10-8-23 அன்று டெல்லியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் *மாண்புமிகு. பாராதி பிரவின் பவார்* அவர்களை சந்தித்து தமிழகத்தில் 186- நம்பிக்கை மையங்களை மூடும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என கடிதம் வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

*மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை* தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று *மாண்புமிகு. தமிழக முதல்வர்* கூறி வருகிறார்.

இந்நிலையில் எச்.ஐ.வி ஆலோசனை மற்றும் பரிசோதனைகள் செய்யும் *நம்பிக்கை மையங்களை மூடும் மத்திய அரசின் மக்கள் விரோத திட்டத்தின்  முதல் கட்டமாக 482 அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார செயல்படும் நம்பிக்கை மையங்களில்  *SOCH- (Strengthening Overall Care for HIV )* செயலியின் செயல்பாட்டை முடக்கி வைக்க *தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு நிறுவனம் (TANSACS)*  நடவடிக்கை எடுத்துள்ளது என்பது மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது. 

இதனால் நம்பிக்கை மையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் எச்.அய்.வி குறித்து தினசரி தரவுகளை (DATA) அனுப்ப இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழத்தில் மொத்தம் 482 நம்பிக்கை மையங்கள் உடனடியாக மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் *எச்.ஐ.வி* ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள நிலையில் மத்திய,மாநில அரசுகளின் முடிவு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

இதனால் தமிழகத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எய்ட்ஸ்  நோயாளிகளில் சேவையில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை தெரிவிக்கிறோம்.தமிழகத்தில் எச்ஐவி - தொற்று பரவும் அபாயம் ஏற்படும் மேலும்  பொதுமக்களுக்கு எச்ஐவி- குறித்து விழிப்புணர்வு பணிகளில் தொய்வு ஏற்படும்.

தற்பொழுது தமிழகத்தில் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்களில் கட்டாயம் எச்ஐவி- பரிசோதனை செய்யப்படுகிறது.  

அரசு மருத்துவமனைகளில் 100 சதவிகிதம் கர்ப்பிணிகளுக்கு எச்ஐவி- பரிசோதனை செய்யப்படுகிறது.

 ஒருவேளை கர்ப்பிணி பெண்களுக்கு *எச்ஐவி தொற்று  இருப்பது* உறுதி செய்யப்பட்டால், 

அது பிறக்கவிருக்கும் குழந்தைக்குப் பரவாமல் இருப்பதற்கான உரிய ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் புதிதாகப் பிறக்கும் குழந்தைகள் *எச்.ஐ.வி தொற்றுடன்* பிறப்பது முற்றிலும் தடுக்கப்படுகிறது. 

ஆனால்  எச்ஐவி-ஆலோசனை மற்றும் பரிசோதனை செய்யும் நம்பிக்கை மையங்களை மூடினால்

 கர்ப்பிணி பெண்களுக்கும்,

குழந்தைகளுக்கும் எச்ஐவி- நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

மேலும் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் நம்பிக்கை மையங்களில் அறுவை சிகிச்சை ,டையாலசிஸ்,அவசர சிகிச்சை பிரிவு மற்றும் பல் மருத்தும் ஆகிய பிரிவுகளுக்கு வரும் நோயாளிகளுக்கு கட்டாயம் எச்ஐவி பரிசோதனை செய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் *நம்பிக்கை மையங்களை மூடினால்* நோயாளிகள் கடுமையாக பாதிப்படைவார்கள்.

இந்நிலையில் எச்ஐவி பரிசோதனை மையங்களை குறைத்தால் 

மீண்டும் தமிழகத்தில்  எச்ஐவி தொற்று பரவும் விகிதம் மீண்டும் அதிகரிக்கும். 

மேலும்   *எச்ஐவி/எய்ட்ஸ்* நோய் தடுப்பு திட்டத்தில் 20 ஆண்டுகளாக சேவை மனப்பான்மையுடன்  *பணிபுரிந்து வரும் 2,500 ஊழியர்களின் வேலை பறிபோகும்* சூழல் ஏற்பட்டுள்ளது வேதனையளிப்பதாக உள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

எனவே *மாண்புமிகு .தமிழக முதல்வர்* இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து எச்ஐவி ஆலோசனை மற்றும் பரிசோதனை செய்யும் *நம்பிக்கை மையங்களை* குறைக்கும் முடிவை தடுத்து நிறுத்திட வேண்டும் என  தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

நம்பிக்கை மையங்களை மூடும் மத்திய,மாநில அரசுகளின் முடிவை கைவிட கோரி *22-12-23* அன்று சென்னையில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட இயக்குனர் அலுவலகத்தில் (TANSACS) *உண்ணாவிரத போராட்டம்* நடத்துவது என தீர்மானித்துள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

நன்றி

அன்புடன்

*மா.சேரலாதன்*, மாநில பொதுச்செயலாளர்

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம்.

- சேரன் வாஞ்சிநாதன் (முகநூலில்) 

Disclaimer: இந்த பகுதி பதிவரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு