பஹல்காம் தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என TRF மறுப்பு

முந்தைய பொறுப்பேற்பு சமூக ஊடகப் பதிவுக் குறித்து, லஷ்கர்-இ-தொய்பா இந்திய சைபர் புலனாய்வுப் பிரிவை குற்றம் சாட்டுகிறது - தி ஹிந்து

பஹல்காம் தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை  என TRF மறுப்பு

உலகளாவிய கண்டனம் தீவிரமடைந்து வரும் நிலையில், லஷ்கர்-இ-தொய்பா (LeT)-இன் துணை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF), 2025 ஏப்ரல் 26 சனிக்கிழமை அன்று, 26 பொதுமக்களை பலிகொண்ட பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் தான் ஈடுபடவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளது. முந்தைய ஆன்லைன் பொறுப்பேற்பு கூற்றை சைபர் ஊடுருவல் எனக் கூறி அந்த அமைப்பு நிராகரித்துள்ளது.

"பஹல்காம் சம்பவத்தில் நாங்கள் ஈடுபட்டதாக கூறும் அனைத்து கூற்றையும் நாங்கள் திட்டவட்டமாக மறுக்கிறோம். இந்தச் செயலுக்கு TRF-ஐ காரணம் காட்டுவது ஆதாரமற்றது,  காஷ்மீர் எதிர்ப்பியக்கத்தைக் களங்கப்படுத்தும் முன்கூட்டியே திட்டமிட்ட பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும் ," என்று TRF செய்தித் தொடர்பாளர் தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்தார்

TRF-இன் ஆன்லைன் அறிக்கையின் நம்பகத்தன்மையை காவல்துறை உறுதிப்படுத்தவும் இல்லை, மறுக்கவும் இல்லை.

 

வெளியாட்களுக்குக் குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில் அந்த அமைப்பு பொதுமக்களை கொலை செய்ததது என்ற முந்தைய கூற்றுக்கு பதிலளிக்கும் வகையில், TRF தனது நிலையை இவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளது: 

 

”பஹல்காம் தாக்குதலுக்குச் சற்றுப் பிறகு, ஒரு அங்கீகரிக்கப்படாத செய்தி எங்களது டிஜிட்டல் தளங்களில் ஒன்றில் சுருக்கமாகப் பதிவிடப்பட்டது. ஆய்வுக்குப் பிறகு, இது இந்திய அரசின் டிஜிட்டல் போர் ஆயுதக் களஞ்சியத்தில் அறியப்பட்ட ஒரு தந்திரமான ஒருங்கிணைந்த சைபர் ஊடுருவலின் விளைவு என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். அந்த மீறலைக் கண்டறிய நாங்கள் ஒரு முழுமையான விசாரணையை நடத்தி வருகிறோம், மேலும் ஆரம்பகட்ட கண்டுபிடிப்புகள் இந்திய சைபர் புலனாய்வுப் பிரிவு பணியாளர்களின் ஈடுபாட்டைச் சுட்டிக்காட்டுகின்றன”.

- வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.thehindu.com/news/national/as-pressure-mounts-trf-denies-involvement-in-pahalgam-attack/article69495143.ece