கரூர் - கடவூர் வட்டாரம்: ஊராளி கவுண்டர் ஆதிக்க சாதி வெறியர்களுடன் கைகோர்த்து நிற்கும் சி.பி.எம் ராமமூர்த்தி...
செந்தளம் செய்திப் பிரிவு

கரூர் மாவட்டம் கடவூர் வட்டாரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக சி.பி.எம் கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கரூர் மாவட்ட தலைவருமான பி. ராமமூர்த்தி ஊராளி கவுண்டர் சாதி சங்கத்தில் பொறுப்புகளில் இருந்து கொண்டு தாழ்த்தப்பட்டோர் அல்லாத சாதிகளை ஒன்று திரட்டி வீரணம்பட்டி, வேப்பங்குடி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதிய ஒடுக்குமுறையை ஏவி இருக்கின்றார் என்பது பெரும் அதிர்ச்சிக்குறிய நிகழ்வாக அறிய முடிகிறது.
மேலும் இவர் சாதி சங்க போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி வருவது தொடர் கதையாக உள்ளது. இவர் சி.பி.எம் கட்சியின் ஒன்றிய கவுன்சிலராகவும் உள்ளார்.
ஏற்கனவே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது மதுபோதையில் இருந்த ஊராளி கவுண்டர் சாதி இளைஞர்கள் ஊர்வலம் நடைபெற்ற வழியாக மோட்டார் பைக்கில் வந்த தாழ்த்தப்பட்ட இளைஞர்களுடன் சாதிவெறியுடன் சண்டையிட்டு தாழ்தப்பட்ட இளைஞர்களை தாக்கியுள்ளனர். இப்பிரச்சனையின் போது ஒரு பேக்கரி பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து தாழ்த்தப்பட்டவர்களை கைது செய்ய கோரி ஊராளி கவுண்ட சாதியமைப்பு போராட்டத்தை நடத்தியது.இப்போராட்டத்திலும் சி.பி.எம் ராமமூர்த்தி முன்வரிசைக்காரராக முன் நின்றுள்ளார்.
இது மட்டுமின்றி கடவூர் வட்டம் வீரணம் பட்டி கிராமத்தில், தமிழ் நாடு அரசு நிலத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் வழிபட சென்ற போது அவர்களை நுழைய விடாமல் தடுத்து உள்ளனர் ஊராளி கவுண்டர் சாதியாதிக் சக்திகள்.
இப்பிரச்சனையை ஒட்டி தாசில்தார் அந்த கோவிலை மூடினார்.தற்போது அந்த கோவிலை திறக்க வேண்டும் என்று ஆதிக்க சாதிவெறி சக்திகள் போராடி வரும் நிலையில் ,அத்தகு சாதியாதிக்க சக்திகளின் போராட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழுவலும் அக்கட்சியின் கவுன்சிலராகவும் உள்ள ராமமூர்த்தியும் கலந்து கொண்டு எரியும் நெருப்பில் எண்ணை வார்த்துக் கொண்டுள்ளார்.
ஊராளி கவுண்டர் ஆதிக்க சாதி வெறி சக்திகளால் பாதிக்கப்படும் தாழ்த்தப்பட்ட சாதியினர் சி.பி.எம் கட்சியை நாடியுள்ள போதிலும், சி.பி.எம்மில் அதிகாரம் படைத்த இந்த ராமமூர்த்தி போன்ற சாதிவெறி சக்திகளால் அவர்கள் நம்பிக்கையிழந்து கையறு நிலையில் நிற்கின்றனர்.
சாதி சங்க போராட்டங்களை முன்னின்று நடத்திவரும் இதுபோன்ற ராமமூர்த்திகளை கட்சிக்குள் வைத்துக்கொண்டும்,இது போன்ற ராமமூர்த்திகள் நிறைந்த திராவிட மாடலுடன் கூட்டணியில் இருந்துக் கொண்டும், வேங்கைவயலுக்கும் நீதிகேட்பதின் மூலமாக, சி.பி.எம் கட்சி அதன் தமிழக சமரச சகிப்பு தன்மை முகத்தின் மேல் விழும் கீறல்களை தனது இறுக்கமான முகத்திற்குள் மறைத்துக் கொள்வதின் மூலம் வெளிவரும் உண்மைகள் ஊமையாகிவிடப் போவதில்லை.
- செந்தளம் செய்திப் பிரிவு
Disclaimer: இந்த செய்தி கிடைக்கப்பெற்ற தகவல்களிலிருந்து பதிவிடப்படுகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு