நந்தினி - நிரஞ்சனா: தொடர் அடக்குமுறையை ஏவிவரும் பாஜக அடிவருடி திமுக அரசை கண்டித்து துணிகர போராட்டம்

நந்தினி ஆனந்தன்

நந்தினி - நிரஞ்சனா:  தொடர் அடக்குமுறையை ஏவிவரும் பாஜக அடிவருடி திமுக அரசை கண்டித்து  துணிகர போராட்டம்

*பாஜக-வின் கைப்பாவையாக செயல்பட்டு* எங்கள் மீது தொடர்ந்து சட்ட விரோதமாக காவல்துறை அடக்குமுறையை ஏவி விடும்...

*DGP சைலேந்திரபாபு மீது நடவடிக்கை எடுக்க கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பு கண்டன போராட்டம்.*

நாள்- 05.05.2023 மாலை 5 மணி

சித்தரஞ்சன் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை.

*ஏன் இந்த போராட்டம்?*

கவர்னர் ஆர்.என்.ரவி- பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஆகிய முன்னாள் IPS அதிகாரிகள் வெளிப்படையான சங்கிகளாக செயல்படுகிறார்கள் என்றால் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு IPS மறைமுகமான சங்கியாக செயல்படுகிறார். 

தமிழ்நாட்டில் பெரும்பாலான IAS,IPS அதிகாரிகள் மறைமுக  சங்கிகளாக செயல்படுகின்றனர். அவர்களில் மிக முக்கியமான சைலன்ட் சங்கி DGP சைலேந்திரபாபு.

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் அதைத் தொடர்ந்து நடந்த கலவரம், வேங்கைவயல் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் உள்ளிட்ட பல பிரச்சனைகளில் காவல்துறை சரியான நடவடிக்கை நடவடிக்கை எடுக்காததற்கு பாஜக-வின் கைப்பாவைவாக செயல்படும் DGP சைலேந்திரபாபுவே காரணம். 

தமிழ்நாட்டுக்கு எதிரான பாசிச பாஜக கும்பலின் சதி திட்டத்தை செயல்படுத்துவதில் சைலேந்திரபாபு முக்கிய பங்கு வகிக்கிறார். இது அனுபவத்தில் நாங்கள் கண்ட உண்மை.

"நாட்டைப் பற்றி சிந்திப்போம்"- என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தமிழ்நாடு முழுவதும் நானும் என் தங்கை நிரஞ்சனாவும் நடத்தி வருகிறோம். மத்திய, மாநில அரசுகள் எப்படியெல்லாம் மக்களை கொள்ளையடித்து ஒரு சில பண முதலைகளை மட்டும் வளர்க்கின்றனர் என்பதை ஆதாரப்பூர்வமாக  இப் பிரச்சாரத்தில் மக்களிடம் எடுத்துச் சொல்கிறோம். முக்கியமாக கடந்த 9 ஆண்டு கால மோடி ஆட்சியின் மோசடிகளை மக்களிடம் அம்பலப்படுத்தி வருகிறோம்.

இந்தியாவில் இதுவரை நடந்துள்ள ஊழல்களிலேயே மோடி ஆட்சியில் நடந்துள்ள 10 லட்சம் கோடி  கார்ப்பரேட் கடன் தள்ளுபடி ஊழல் தான் மிகப்பெரிய ஊழலாகும். பல கோடி  இந்திய மக்களின் உழைப்பை வட்டி,அபராத வட்டி,மினிமம் பேலன்ஸ் இல்லை என்ற பெயரில் அபராதம்,ATM சேவை கட்டணம் இப்படி பல வழிகளில் வங்கிகள் உறிஞ்சுகின்றன. 

இப்படி மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பல லட்சம் கோடிகளை  அரசியல் செல்வாக்கு மிக்க சில கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வங்கி கடனாக தாராளமாக வாரி வழங்குகின்றன. பின்பு அரசியல் அழுத்தம் காரணமாக இக்கடன்களை வாராக்கடன் என்ற பெயரில் தள்ளுபடி செய்து விடுகின்றன. மோடிக்கு நெருக்கமான குஜராத் தொழில் அதிபர்கள் தான் இதில் 90% க்கும் மேல் பலனடைந்துள்ளனர். 

இவ்வாறு வங்கி ஊழல் மூலம் சுருட்டிய பல லட்சம் கோடிகளை கொண்டு தான் அம்பானி-அதானி உள்ளிட்ட குஜராத் கார்ப்பரேட்டுகள்   அரசின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், எண்ணெய் நிறுவனங்கள் உட்பட நாட்டின் அனைத்து பொது சொத்துகளையும் கைப்பற்றுகின்றனர். நாட்டின் இயற்கை வளங்களை அழித்து தமது சாம்ராஜ்யத்தை வளர்க்கின்றனர். வாராக்கடன் தள்ளுபடி ஊழலில் கொள்ளையடித்த பல லட்சம் கோடி பணத்தின் மூலமாக நாடு முழுவதும் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில மக்கள் காலங்காலமாக நடத்தி வரும் தொழில்களையும் வியாபாரத்தையும் குஜராத் தொழில் அதிபர்கள் கைப்பற்றுகின்றனர். 

மத்திய பாஜக அரசும் மாநில அரசுகளும் குஜராத் கார்ப்பரேட்டுகளுக்கு  எல்லா விதத்திலும் பக்கபலமாக உள்ளன. பாஜக வை எதிர்ப்பதாக சொல்லும் திமுக ,காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் உட்பட எதிர் கட்சிகள் ஆளும் மாநில அரசுகளும் குஜராத் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாகவே செயல்படுகின்றன.

இதன் காரணமாக தமது சொந்த மாநிலத்திலேயே தொழில்களை இழந்து வேலை வாய்ப்புகளை இழந்து மக்கள் அகதிகளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த உண்மைகளை எல்லாம் களத்தில் மக்களிடம் நாங்கள் அம்பலப்படுத்துவதால் ஆத்திரமடைந்துள்ள பாஜக கும்பல் எங்கள் மீது ரௌடிகளை ஏவி விட்டு எப்படியாவது எங்களது பிரச்சாரத்தை தடுக்க முயல்கிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் தூண்டுதலில் நாங்கள் பிரச்சாரம் செல்லும் இடங்களில் எல்லாம் பாஜக ரௌடிகள் அராஜகத்தில் ஈடுபடுகின்றனர். எல்லா இடங்களிலும் திமுக அரசின் காவல்துறை பாஜக வின் ரௌடித்தனத்துக்கு  உடந்தையாக செயல்பட்டு எங்கள் மீது அடக்குமுறையை ஏவுகிறது. 

___________________

வீடியோ ஆதாரங்கள்: 

https://m.facebook.com/story.php?story_fbid=1605631499950647&id=100015114364035&mibextid=Nif5oz

https://m.facebook.com/story.php?story_fbid=1628187014361762&id=100015114364035&mibextid=Nif5oz

https://m.facebook.com/story.php?story_fbid=1559720641208400&id=100015114364035&mibextid=Nif5oz

________________

அமைதியான முறையில் துண்டுப்பிரசுரம் வழங்கி கருத்து பிரச்சாரம் செய்யும் எங்கள் மீது தொடர்ந்து காவல்துறை அடக்குமுறை ஏவப்படுவதற்கு சைலன்ட் சங்கியாக செயல்படும் DGP சைலேந்திரபாபுவே காரணம்.

மதுரை மாவட்டம் அழகர் கோவில், திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் நகரம், ஓட்டன்சத்திரம், வத்தலக்குண்டு, நத்தம், திருச்சி, தேனி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, கோட்டூர் என தொடர்ச்சியாக மாநிலத்தின் பல இடங்களில் பாஜக ரௌடிகள் எங்களிடம் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எல்லா இடங்களிலும் காவல்துறை பாஜக ரௌடிகளுடன் கைகோர்த்து செயல்பட்டது. எங்களை கைது செய்து வழக்கு போடும் காவல்துறை ஒரு இடத்தில் கூட பொது இடத்தில் பொறுக்கித்தனம் செய்யும் பாஜக ரௌடிகும்பல் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காவல் துறையினரின் முன்பாகவே பாஜக ரௌடிகள் எங்களை தாக்கி பிரசுரங்களை பறித்து கிழிக்கிறார்கள்," உயிரோடு கொளுத்துவோம் " என பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுகிறார்கள்,ஆபாசமாக அவதூறாக பேசுகிறார்கள். பாசிச பாஜக பொறுக்கிகளின் அத்தனை அட்டூழியங்களுக்கும் காவல்துறை உடந்தையாக செயல்படுகிறது. எங்களுக்கு ஆதரவாக வரும் மக்களை காவல்துறை தாக்கி விரட்டியடிகிறது. பாஜக பொறுக்கிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வேலையைத்தான் திமுக அரசின் காவல்துறை செய்கிறது.

ஒரு இடத்தில் இப்படி நடக்கிறது என்றால் இது உள்ளூர் போலீசில் உள்ள சங்கிளின் வேலை என கருதலாம். மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து இப்படி நடக்கிறது. போலீஸ் டிஎஸ்பி போன்ற உயர் அதிகாரிகள் மேலிட உத்தரவு என்று சொல்லி எங்களை கைது செய்கின்றனர். பாஜக ரௌடிகளோடு சேர்ந்து கொண்டு பொது இடங்களிலும் காவல் நிலையத்திலும்  எங்களை மிரட்டுகின்றனர். காவல்துறை தலைவரான சைலேந்திரபாபுவின் ஒப்புதல் இல்லாமல் எல்லா இடங்களிலும் இப்படி நடக்குமா?

அதிமுக ஆட்சியிலும் திமுக ஆட்சியிலும் எத்தனையோ போலீஸ் அடக்குமுறையை சந்தித்திருக்கிறோம்.

பல பொய் வழக்குக்குளை சந்தித்திருக்கிறோம். 

ஆனால் இவற்றில் எல்லாம் உச்சமாக பாஜக வினரின்  தூண்டுதலின் பேரில் திமுக அரசு என் மீதும் என் தங்கை நிரஞ்சனா மீதும் கடந்த 13.04.2023 அன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காவல்நிலையத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பொய் வழக்கு போட்டுள்ளது. பாசிச மோடி ஆட்சிக்கு எதிராக சமரசமின்றி தீவிரமாக போராடுவதால் இந்த பொய் வழக்கு. போலீஸ் முன்பாகவே என்னை தலையில் தாக்கிய பாஜக வினரை காவல்துறை கைது செய்யவும் இல்லை, வழக்கு போடவும் இல்லை.

அண்ணாமலை, சைலேந்திரபாபு ஆகியோர் தங்களது போலீஸ் மூளையை பயன்படுத்தியும் பாசிச சங்கி சூழ்ச்சி திட்டங்கள் மூலமாகவும்  எத்தகைய அராஜகத்தையும் அடக்குமுறைகளையும் ஏவினாலும்

நாட்டுக்கான, மக்களுக்கான எங்களது நியாயமான உறுதி மிக்க போராட்டத்தை சீர்குலைக்க முடியாது.

- நந்தினி ஆனந்தன்

(முகநூலில்)

https://www.facebook.com/100015114364035/posts/pfbid0qZM5sfi3XdnAQ7viRv8kBsXuBC7dUif87phtt5m9sEH3D8cdgntWCa8uQ3FF7JL5l/?app=fbl

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு