பக்தி பரவசம் பொங்கி பிரவகிக்கிறது பகுத்தறிவாளர்கள் ஆட்சியில்!

சாவித்திரி கண்ணன்

பக்தி பரவசம் பொங்கி பிரவகிக்கிறது பகுத்தறிவாளர்கள் ஆட்சியில்!

தமிழ் கடவுள் முருகனுக்கு மாபெரும் முத்தமிழ் மாநாடு ஏற்கனவே பல கோடி செலவில் நடத்தப்பட்டுவிட்டது.

தற்போது தமிழகத்தின் மூன்று இடங்களில் விண்ணை முட்டும் மாபெரும் சிலைகளாம்!

பாஜககாரன் எப்பவோ ஒரு முறை வேல் யாத்திரை நடத்திவிட்டு போனதும் போனான், திமுக ஆட்சியாளர்களுக்கு முருகன் மீது பக்தி வெறி பீறீட்டு எழுந்துள்ளது போலும்.

சட்ட சபையில் எம்.எல்.ஏக்களில் சிலர் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளுக்கு நான்காண்டுகளாக கம்பவுண்ட் சுவர் கேட்டும் கிடைக்கவில்லை.

நெல்லைக் கொள் முதல் செய்து வைக்க குடோன்கள் கட்டக் கோரிக்கை வைத்து ஓய்ந்தனர் சிலர்!

அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதரப் பணியாளர்களை நியமிக்க கூட நிதியில்லாமை என பல இல்லாமைகளில் தமிழகம் உழல்கிறது…!

ஆனால், கோவில் குட முழுக்குகளை இது வரையிலான தமிழக ஆட்சியாளர்களிலேயே மிகச் சிறப்பாகவும், அதிகமாகவும் பெரும் நிதியை ஒதுக்கி செய்து கொண்டிருக்கும் ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி தான்.

 ’இதனை தமிழ் சமஸ்கிருதம் இரண்டும் இணைந்து செய்ய வேண்டும்’ என்ற நீதிமன்றத் தீர்ப்பை குப்பையில் கடாசி முழுக்க, முழுக்க சமஸ்கிருதத்தில் மட்டுமே செய்து கொண்டிருக்கும் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி தான்!

இவை போதாது என்று, முருகனுக்கு மேலும் பெருமை சேர்க்க முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உத்தரவுப்படி,

மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலையாம்…!

பெரியார் மண்ணாம் ஈரோடு  திண்டலில் 180 அடி உயர முருகன் சிலையாம்!

இராணிப்பேட்டை குமரகிரி திமிரியில் 114 அடி உயர முருகன் சிலையாம்!

கம்யூனிஸ்டுகள், பெரியாரிஸ்டுகள்  என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

- சாவித்திரி கண்ணன்

https://www.facebook.com/share/15DW9aDGVf/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு