கொல்கத்தா பெண் மருத்துவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானாரா? - வலுக்கும் சந்தேகம்

விகடன் இணைய இதழ்

கொல்கத்தா பெண் மருத்துவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானாரா? - வலுக்கும் சந்தேகம்

கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் உடலில் 150 மில்லி அளவுக்கு விந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவ கல்லூரியில் 31 வயது மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். கடந்த வாரம் நடந்த இப்படுகொலை இந்தியா முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கொலை செய்யப்பட்ட பெண்ணை பிரேத பரிசோதனை செய்ததில் அவரது உடம்பில் பல்வேறு இடங்களில் காயம் இருந்தது தெரிய வந்தது. இதனால் அவரை ஒன்றுக்கும் மேற்பட்டோர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கவேண்டும் என்று அப்பெண்ணின் பெற்றோர் நீதிமன்றத்தில் சந்தேகம் தெரிவித்து இருந்தனர்.

தற்போது அப்பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்து டாக்டர்கள் தெரிவித்திருக்கும் கருத்து அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

இப்படுகொலை தொடர்பாக சஞ்ஜய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இக்காரியத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருக்கவேண்டும் என்று டாக்டர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் பிறப்புறுப்பில் 150 மில்லி அளவுக்கு விந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையை அணுகிய டாக்டர் சுபர்னா தெரிவித்துள்ளனர். இதனால் பெண் டாக்டர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருக்கவேண்டும் என்றும் டாக்டர் டாக்டர் சுபர்னா கோஸ்வாமி தெரிவித்தார். ஒருவர் மட்டும் பாலியல் வன்கொடுமை செய்திருந்தால் இந்த அளவுக்கு விந்து இருக்க வாய்ப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் கால் முற்றிலும் உடைக்கப்பட்டு இருந்தது. அப்பெண் அணிந்திருந்த கண்ணாடி உடைந்து கண்ணிற்குள் சென்று இருந்தது. ஒன்றுக்கும் மேற்பட்டோர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்திருந்தால் மற்றவர்கள் யார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவர்கள் மருத்துவமனையை சேர்ந்தவர்களா அல்லது வெளியில் இருந்து வந்தவர்களா என்பது குறித்து சி.பி.ஐ.விசாரித்து வருகிறது. சி.பி.ஐ.யிடம் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தகவல் தெரிவிக்கப்படும் என்றும் டாக்டர்கள் தெரிவித்தார். சி.பி.ஐ. இன்று தனது விசாரணையை தொடங்கி இருக்கிறது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை சி.பி.ஐ தங்களது காவலில் எடுத்திருக்கிறது. படுகொலையை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் டாக்டர்களுடன் சேர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.சுகந்து சேகரும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், எனக்கும் மகள்கள், பேத்திகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

விகடன் இணைய இதழ்

https://www.vikatan.com/crime/150ml-sperm-in-womb-kolkata-female-doctor-gang-raped-and-murdered?utm_source=social&utm_medium=whatsapp&utm_campaign=jv_community

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு