வேலை கேட்டு சாம்சங் ஆலைக்கு போகும் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க அரசே தலையிடு!
முத்துக்குமார்

சாம்சங் ஆலையில்
1600 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் சட்ட விரோத உற்பத்தியில் தொடர்ந்து ஈடுபடும் அராஜகம்
புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் உணர்ச்சியற்ற தொழிற்சாலை துறை
போட்டி அமைப்பை உருவாக்கி அவர்களோடு ஒப்பந்தம் போடுவோம் என்று தயாராகிக் கொண்டிருக்கிறது சாம்சங் நிர்வாகம்
தொழிலாளர் குறைகளை சொல்லுவதற்கோ கேட்பதற்கோ தீர்ப்பதற்கோ இந்திய நிர்வாகம் தயாராக இல்லாத போது கொரிய நிர்வாக அதிகாரியை சந்திக்க முறையிட்டது மாபெரும் குற்றம் என்று சாம்சங் நிர்வாகம் சொல்லுகிறது
இதற்காக 23 நிர்வாகிகளை விசாரணை இல்லாமலேயே நேரடியாக பணியிடை நீக்கம் செய்கிறது நிர்வாகம்
தனி விசாரணை இடமாற்றம்
தொடர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளாக்கம் சாம்சங் நிர்வாகத்தில் நடவடிக்கைகளை எதிர்த்து
தொழிலாளர்கள் போராடினால்
தண்டனையாக 8 நாள் சம்பளத்தை இப்போது பிடித்திருக்கிறார்கள்
அனைவரும் வேலைக்கு வரவும் பழி வாங்கள் நடவடிக்கை திரும்ப பெறவும் சுமூக தீர்வு ஏற்படவும்
எல்லா வகையிலும் தொழிற்சங்கம் ஒத்துழைக்க தயார் என்று சொன்னவுடன்
தான் குற்றம் செய்ததாக தனக்கு தானே மன்னிப்பு கடிதம் எழுதி கொடு என்று கேட்கிறது ஆணவம் பிடித்த சாம்சங் நிறுவனம்
சட்டவிரோத உற்பத்தி தொழிற் தகராறு சட்டங்களை ஏற்க மறுப்பது
சங்கம் அமைத்தவர்களை பழிவாங்குவது
சங்க உரிமையை மறுப்பது
அடிப்படை மனித உரிமைகளை காலில் போட்டு மிதிப்பது
எல்லா குற்றங்களையும் செய்தவர்கள் சொல்லுகிறார்கள் தொழிலாளிகளை பார்த்து மன்னிப்பு கேள் என்று
சாம்சங் ஆலையில் அந்த எந்திரங்களை இயக்க உரிமை படைத்தவர்கள் நிரந்தர தொழிலாளிகளே
வேலை செய்ய 7-3- 2025 காலை 7 மணி அளவில் சாம்சங் ஆலை முன்பு சங்கமிக்கிறார்கள் சாம்சங் தொழிலாளர்கள்
அரசே வேலை கேட்டுப் போகிறவர்களுக்கு வேலை கொடுக்க தலையீடு !
முத்துக்குமார் (முகநூலில்)
https://www.facebook.com/share/p/1A1F5pRgAB/?mibextid=oFDknk
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு