இணைய வழிக் கூட்டம்: முள்ளிவாய்க்கால் நினைவும் படிப்பினைகளும்
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

முள்ளிவாய்க்கால் நினைவும் படிப்பினைகளும் என்ற தலைப்பில் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் ஏற்பாடு செய்த இணையவழி கூட்டத்தினை அமைப்பின் மாநில அமைப்பாளர் தோழர் தெய்வசந்திரன் தலைமையேற்று நடத்தினார்.
தமிழீழ விடுதலைப்போரில் மாண்ட தியாகிகளின் நினைவினை நெஞ்சம் பற்றுதலும் இன்று ஈழ மக்கள் முன்னுள்ள அரசியல் கடமைகள் மற்றும் விடுதலைப் போராட்டத்தின் தோல்வியிலிருந்து பெறப்படும் படிப்பினைகள் என்பதை மையங்கொண்டு நிகழ்வில் உரையாற்றியோரின் உரைகள் அமைந்தது.
தலைமையேற்று நடத்திய மாநில அமைப்பாளர் தோழர் தெய்வசந்திரன், சிங்கள பேரினவாத - புத்தமதவாத சிங்கள பக்சே அரசும் விரிவாதிக்க (காங்கிரசு) இந்திய அரசும் தமிழின அழிப்பு போரினை நடத்தியதோடன்றி அமெரிக்க சீன ரஷ்ய ஏகாதிபத்தியங்கள் தங்கள் மேலாதிக்க நலன்களிலிருந்து சிங்கள பக்சே அரசுடன்
கூட்டிணைந்து எப்படி தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கினர், தமிழின அழிப்பை நடத்தினர் என்பதை விளக்கி பேசினார்.
https://youtu.be/5ixn2BEWkww?si=L0pggdNOsZM5QXMu
அடுத்து, நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தோழர் கு.ஜெயசீலன் பேசினார். ஈழத்தில் நடைபெற்ற தமிழ் ஈழ விடுதலை போராட்டத்தை, எதிர்கொண்ட இன அழிப்பை, பயங்கரவாதத்திற்கு எதிரான போராக இன்றுவரை திருத்தல்வாத கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறிவரும் நிலையில், பெரியவர் ஏ.எம்.கே தலைமையிலான மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் ஈழப் போராட்டத்தில் சரியான நிலைபாட்டினை வைத்து போராடி வருவதை தான் ஆரம்பம் முதலே பார்த்து வருவதாகக் கூறினார். சர்வதேசிய நிலைமையின் கீழ் ஈழப் போராட்டம் ஒடுக்கப்பட்டதையும் தமிழின அழிப்பு நடத்தப்பட்டதையும் விளக்கியவர் தேசிய இன விடுதலைப் போராட்டத்தை சோசலிச முகாம் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஆதரவளிக்க வேண்டிய அவசியம் குறித்தும் பேசினார்.
https://youtu.be/x64z1k-uups?si=23uln-EVKvyK61Pn
அடுத்து, யாழ்பாணத்திலிருந்து பேசிய தோழர் அருள், ஈழ தேசிய இனப் போராட்டதிற்கு ஏ.எம்.கே - மார்க்சிய அடிப்படையில் சரியான வழிக்காட்டலை முன்வைத்ததையும் அதன் அடிப்படையில் தாங்கள் செயலாற்றியதையும் நினைவுகூர்ந்து தனது பேச்சினை தொடர்ந்தார். போரின் இறுதிக்கட்டத்தில் நேர்ந்தவற்றை பதிவு செய்தார். மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் அந்நாட்டின் நிலைமை மற்றும் சர்வதேசிய நிலைமைகளையொட்டி மூத்த தோழர்கள் சார்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையினை இறுதி முழக்கங்களுடன் விவரித்து ஓயாது அலை! முற்போக்கு தேச விடுதலை இயக்கத்தை கட்டியமைப்போம்! என்ற சூளுரையோடு முடித்தார்.
https://youtu.be/4qnym6Tk2yU?si=c-XQpfLxC984jtHU
அடுத்து தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த ம.ஜ.இ.க தோழர் முருகன் பேசினார்.
அமெரிக்க - சீன மேலாதிக்க - இந்திய விரிவாதிக்க நலன்களுக்கு பலியிடப்பட்ட ஈழ விடுதலைப் போராட்டத்தையும், இன்று இலங்கையை கூறு போட்டுக் கொண்டிருக்கிற ஏகாதிபத்தியங்களின் போட்டியினையும் ஈழப் போராட்டம் குறித்த பல்வேறு வரலாற்று அரசியல் நினைவுகளையும் பதிவு செய்தார்.
https://youtu.be/G6RX2vWw1N0?si=rk7HY_SF_leGqyCj
இறுதியாக இணையவழிக் கூட்டத்தினை தஞ்சை அரியலூர் மாவட்ட அமைப்பாளா் தோழர் மணிவேல் நன்றிக் கூறி முடித்துவைத்தார்.
இந்நிகழ்வில் பங்கெடுத்து உரையாற்றிய - விவாதித்த அனைத்து தோழர்களுக்கும் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
குறிப்பு : வீடியோவினை பார்ப்பதற்கான இணைப்புகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
- மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்